பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் காட்டு காகரிகம் 99 வந்தார்களென்று கருதுதல் வேண்டா. கற்ருேருக்கும் அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் குறள், காலாடியார் முதலிய நூல் களைக் காட்டிலும் ஒளவையின் நூல்களில் அகப் பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன. ஆனால், இந்த நீதி நூல்கள் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த முதல் ஒளவை யால் இயற்றப்பட்டன அல்ல வென்றும் சுமார் ஆயிரம் வருஷங் களுக்கு முன்னேயிருந்த இரண்டாம் ஒளவையால் செய்யப் பட்டன என்றும் ஒரு கட்சியார் சொல்லுகிருர்கள். ஒளவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜநீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ் காட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்கத் துரதில் கியமனம் பெற்றிருக்கிருர். மேலும் அவர் சிறந்த ஆத்ம ஞானி; யோக சித்தியால், உடம்பை முதுமை, கோவு, சாவுகளுக்கு இரை யாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார். ' மாசற்ற கொள்கை மனத்தமைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு ' அதாவது, ஹிருதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகையற்ற எண்ணங்களே நிறுத்திக் கொண்டால், உடம்பில் தெய்வத்தன்மை, அதாவது சாகாத்தன்மை (அமரத் தன்மை) விளங்கும் என்றும் பொருள் படுவது. இந்தக் குறள் பாடியவர் ஒளவையார். இவர் தாமே நெடுந்துாரம் இக் கொள்கைப்படி ஒழுகியவரென்பது இவருடைய சரித்திரத்தில் விளங்குகிறது. ஒரு தேசத்தின் நாகரிகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளமென்று முந்திய வியாசத்தில் சொன்னேன். திருஷ்டாந்தமாக ஆங்கிலேய நாகரிகத்துக்கு ஷேக்ஸ்பியர் ’ முதலிய மஹா கவிகளின் நூல்களே அளவுக் கருவியாக கருதப் படுகின்றன. காங்கள் இந்தியா தேசத்து ராஜ்யாதிகாரத்தை இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுவோமேயன்றி ஷேக்ஸ்பியரை இழக்க ஒரு நாளும் ஒருப் படமாட்டோம் என்று நாம் மறுமொழி சொல்வோமென்று மெக்காலே என்னும் ஆங்கிலேய ஆசிரியர் சொல்லுகிரு.ர்.