பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆனந்த சக்தி எறும்பு இறந்துபோன புழுவை இழுத்துச் செல்லுகிறது; எதல்ை? சக்தியினல். தூமகேது அநேக லட்சம் யோசனை தூரமான தனது வாலே இழுத்துக் கொண்டு திசை வெளியில் மஹா வேகத்தோடு சுழலுகின்றது ; எதல்ை சக்தியினல். அந்த தூமகேது எழுபத்தைந்து வருஷத்தில் ஒரு மண்டலமாகத் தன்னைச் சுற்றிவரும்படி சூரிய கோளம் கியமிக்கிறது ; எதல்ை? சக்தியில்ை. ஒர் கன்னிகை பாடுகிருள். கெப்போலியன் ஐரோப்பாக் கண்டம் முழுமையும் வெல்லுகிருன். இவை இரண்டிற்கும் சக்தியே ஆதாரம். கண்ணுக்குப் புலப்படுவதும், ஊக்கத்திற்குப் புலப் படுவதுமாகிய வெளியுலகங் கூட எல்லேயற்ற தென்று பண்டிதர் கள் கண்டிருக்கிருர்கள். இந்த எல்லேயற்ற உலகத்தை இயக்கும் சக்தி தானும் எல்லையற்றதாகும். அந்தமானது, அதனிலும் பெரிது. இவ்வித சக்தியை மனிதன் பாவனே செய்வதால் பலவிதப் பயன்களுண்டு. யத்பாவயளி தத் பவளி. எதனைப் பாவிக் கிருயோ நீ அதுவாக ஆகின்ருய். ஆனால், இங்ஙனம் பாவனே செய்வது லேசான காரியமென்று கினைத்து விடலாகாது. உயிர் ததும்பியதும் கனல்வதுமான சிரத்தையுடன் பாவனே செய்ய வேண்டும். பொறி பறக்கும் பக்தியுடன் தியானம் செய்ய வேண்டும். இதனை வீண் கதை யென்று கினைத்து விடவேண்டாம். விடாமல் அனுஷ்டானம் செய்து பார்த்தால் இதன் பயன் தெரியும். ஞானிகளென்றும், யோகிகளென்றும் சொல்லப்படுவோர், இந்த சக்தியை, மனதறிந்து சில முறைகளே அனுஷ்டித்து, பெறு கிருர்கள். ஸாமான்ய ஜனங்கள் விஷயம் தெரியாமல் இயற்கை முறையிலே சிறிது பெற்றவர்களாகின்றனர். சக்தி சிறிதும் இல்லாவிட்டால், ஒருவன் கூடிண நேரங்கூட மூச்சு விட்டுக் கொண்டு இவ்வுலகத்தில் இருக்க முடியாது. வெளிக் காற்றிலே