பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த சக்தி 133. கூடாது? இந்த மூடத் தமோ குணத்தால் என்ன சுகங்கள் கண்டு விட்டோம் ? சோம்பலாலும் அற்ப விஷயங்களிலே ஆசை கொண்டு மனதைக் கடலில் அகப்பட்ட துரும்பு போலச் சலிக்க விடுவதாலும் என்ன பேறுகள் பெற்றுவிட்டோம் ? துணிவு, உள்ளத் தூய்மை, ஏதாவதொரு மகத்தான லட்சியத் திலே அறிவை ஆணி கொண்டடித்தது போலப் பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நஷ்டங்களிலே சிந்தனே இல்லாமை-இவை தான் யோகத்தின் இரகசியம்.