பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தமிழ் கல்கத்தாவிலிருந்து வெளிப்படும் 'மாடன் ரெவ்யூ" என்ற மாதப் பத்திரிகையின் தை-மாசி ஸஞ்சிகையை நேற்றுப் பொழுது போக்கின் பொருட்டாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ் சரித்திர பண்டிதர் பூநீ நீலகண்டையர் ஒரு சிறிய கடிதமெழுதியிருக்கிருர், ஏற்கனவே மேற்படி பத்திரிகையில் பூநீயதுநாத ஸர்க்கார் என்ற வித்வான் எழுதியிருந்த சில வார்த்தைகளைக் குறித்து நீஐயர் தமது கருத்துக்களை வெளியிடுகிருர். கலாசாலையிலே சரித்திரப் பாடங்களை இங்கிலீஷில் கற்று கொடுப்பது பயனில்லாத வீண் தொல்லையாக முடிகிறதென்றும் தேச பாஷைகளிலே கற்றுக் கொடுத்தால் நல்ல பயன் விளையு மென்றும் பூரீ ஸர்க்கார் தமது அனுபவத்திலே கண்ட செய்தியைச் சொன்னர். அதற்கு நமது திருநெல்வேலிப் பண்டிதர் சொல்லுகிருர் :-"பாஷைத் தொல்லை பெருந்தொல்லையாகவே இருக்கிறது. ஆனல் எனது ஜில்லா, எனது காலேஜ் சம்பந்தப்பட்ட வரையிலே பிள்ளைகளுக்குச் சரித்திரப் பாடம் இங்கிலீஷிலே கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் தேச பாஷையில் கற்றுக் கொடுப்பது அதிகம் பயன்படுமென்று சொல்வதற்கில்லே. என்து மாளுக்கர்களிலே பெரும்பாலோர் இங்கிலீஷ் இலக்கணப் பிழைகளும் வழக்குப் பிழைகளும் கிறையச் செய்தபோதிலும் மொத்தத்திலே தமிழைக் காட்டிலும் இங்கிலீஷை கன்ருக எழுது கிருர்கள். சரித்திர விஷயங்களே வியவஹரிக்கும்போது எனக்கும் இங்கிலீஷ்தான் தமிழைக் காட்டிலும் கன்ருகச் சொல்ல வருகிறது.” இங்ங்ணம் எழுதுகிற பூநீலேகண்டையரின் நிலைமையை கினைத்து கான் மிகவும் வருத்தப்படுகிறேன். சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாதவர்கள் சாஸ்திர பாடங்கள் கடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை ! புதுமை ! புதுமை 11 !