பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மூட பக்தி நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடை பெறும் மூட பக்திகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. இதல்ை நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லையில்லே. இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள், நகrத்திரம், லக்னம் முதலியன பார்த்தல். கூடிவரம் பண்ணிக் கொள்ள வேண்டு மென்ருல், அதற்குக் கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பகடிப் பொருத்தம், திதிப் பொருத்தம், காட் பொருத்தம், நகrத்திரப் பொருத்தம், இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. கூடிவரத்துக்குக் கூட இப்படியென்ருல், இனிக் கல்யாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங் கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே கம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும் அவற்ருல் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை கம்மவர் கணிப்பதே கிடையாது. சகுனம் பார்ப்பதினால் காரிய கஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. காட் பொருத்தம், லக்னப் பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே காரிய நஷ்டம் மட்டு மின்றி மேற்படி லக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிட ருக்கு வேறு பணம் செலவாகிறது. - ' காலம் பணவிலே யுடையது' என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்றிருக்கிறது. இந்த சமாசாரம் கம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின், அதல்ை பண லாபம் கிடையாமற் போகும். இன்று செய்யக் கூடிய காரியத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமஸப்படுத்தி