பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசக ஞானம் 145 வோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள், உலகத் திரே கூட்டங் கூட்டமாக நேர்மை வழியிற் புகுவோம். ஆண் பெண் ஸ்மத்வமே தர்மமென்று தெரிகிறதா ? அப்படி யானல், வாருங்கள் ; மாதர்களே லக்ஷக்கணக்காக விடுதலை செய் வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததா? கிற வேற்றுமைகளும் தேச வேற்றுமைகளும் உபயோகம் இல்லாதனவென்று தெரிந்ததா? நல்லது, வாருங்கள் கோடிக்கணக்காக. ஸ்மத்வ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளே லக்ஷக்கணக்கான மக்கள் கூடி கின்று தகர்ப்போம். அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும்’ என்று தெரிக் தோமா ? நல்லது, எழுங்கள் கோடிக்கணக்கான மானிடர் எங்கும், எப்போதும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம். கலியை அழிப்போம். ஸத்யத்தை காட்டுவோம். பா-10