பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பாரதி தமிழ் கிருஸ்துவர்களாயினும், பார்ஸிகளாயினும், மகம்மதியராயினும், எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தை கொண்டாடிய போதிலும், பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணுகக் கொண்ட மனிதர்களேயெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும். இது ஒரே ஜாதி ; பிரிக்க முடியாதது ; அழிவில்லாதது. இதற்கு ஆதாரமும் மூலபலமுமாவது யாதெனில், ஆர்ய ஸம்பத்து. அதாவது ஆரியரின் அறிவும் அந்த அறிவின் பலன்களும். ஆர்ய ஸ்ம்பத்து ஸம்பத்து என்பது ஸம்ஸ்கிருதச் சொல். இதன் பொருள் செல்வம். ஆனல் இங்கு செல்வம் என்பது திரவியத்தையும் பூஸ்திதியையும், ஆடு மாடுகளையும் மாத்திரமே குறிப்பிடுவதன்று. (1) அறிவுச் செல்வம், (2) ஒழுக்கச் செல்வம், (3) பொருட் செல்வம் ஆகிய மூன்றையும் குறிப்பிடும். ஆரிய ஸம்பத்து ' என்பது ஹிந்துக்களுடைய அறிவு வளர்ச்சி. நமது வேதம், கமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது காட்டியம், நமது தொழில் முறைகள், கமது கோபுரங்கள். நமது மண்டபங்கள், நமது குடிசைகள்-இவை யனைத்துக்கும் பொதுப் பெயர் ஆரிய ஸம்பத்து. 'காளிதாஸன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளளிதாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி-இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆரிய ஸம்பத்து. தஞ்சாவூர் கோயில், திருமலை நாய்க்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல்இவையனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. எனவே, ஆரிய ஸம்பத்தாவது ஹிந்துஸ்தானத்தின் நாகரீகம். இந்த ஸம்பத்தைப் பாதுகாக்கும் வரையில் இந்த ஜாதிக்கு உயிருண்டு. இந்த ஸம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால், இந்த ஜாதியைச் செல் அரித்துவிடும்.