பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக வாழ்க்கையின் பயன் 15? மனத்துள் அவை அழுத்தாமல், வாயில்ை பிதற்றிக் கொண்டு வந்திருக்கிருர்கள். ஆயினும், பண்டிதர்களுக்கும் பாமரர்களுக்கும் ஒருங்கே அந்த ஞானத்தை கித்ய அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி, பழைய அஞ்ஞானம் தடுக்கிறது. 'அஞ்ஞானத்தை வென்ருல், தீராத இன்பநிலை யெய்திவாழலாம்' என்று சாஸ்திரம், யுக்தி, அனுபவம்-மூன்று பிரமாணங்க ளாலும் விளங்குகிறது. எனினும், அந்த அஞ்ஞானப் பிசாசை யும் அதன் குட்டிகளாகிய காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம் என்ற ஆறு யமதூதர்களையும் வெல்ல மனித னுடைய சித்தம் இடங்கொடுக்க மாட்டேன் என்கிறது. நாயைக் குளிப்பாட்டி நல்ல உணவளித்து நடு வீட்டில் வைத்தால், அது மறுபடியும் அசுத்த உணவை விரும்பி வாலேக் குழைத்துக் கொண்டு ஒடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டியபோதிலும், மனம் அவற்றில் கிலேபெருமல், மீண்டும் ஏதேனும், ஒரு துன்பக் குழியிலே கண்ணேத் திறந்து கொண்டு போய் விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது. மனம் கலங்கிய மாத்திரத்தில் புத்தி கலங்கிப் போய்விடுகிறது. ஆகையால், புத்தியை கம்பி எவனும் மனத்தைக் கலங்க விடாதிருக்க கடவன். மனத்தைக் கலங்க விடாமல் பயிற்சி செய்வதே எல்லாவித யோகங்களிலும் சிறந்த யோகமாகும். மனம் தவறி ஒரு துன்பக் குழியில் போய் விழுங் காலத்தில், புத்தி சும்மா பார்த்துக் கொண்டு நிற்கிறது. ஒரு வேளை புத்தி தடுத்தபோதிலும், அதை மனம் கவனிப்பதில்லை. புத்தியை மீறி உழலும் சக்தி மனத்துக்கு இருக்கிறது. * ஆதலால், மனம் துன்பத்தில் கழுவி விழத் தொடங்கும்போது, அதை உறுதி அல்லது தைரியம் என்ற கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழகுவதே சரியான யோகப் பயிற்சியாம். இந்தப் பயிற்சி ஏற்படுத்திக் கொள்ளுமாறு சிலர் உலகத்தை விட்டு நீங்கித் தனியிடங்களிலிருந்து கண்ணே மூடிக்கொண்டு பழகு கிருர்கள். வேறு சிலர் மூச்சைப் பல இடங்களில் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிருர்கள் , தனியே இருந்து ஜபம் பண்ணிப் பார்க்கிருர்கள்.