பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பாரதி தமிழ் காரன் திருடன், மாமன் திருடன், மைத்துனன் திருடன், ஆகை யால் அவனும் திருடன். அம்மாதிரியான ஒருவன் தன் கருமங்களை ஒரு கொள்கை வசமாய்ச் செய்தான் என்று சொல்லக் கூடாது. அவனுக்குப் பகுத்தறிவு இருக்கலாம். அல்லது இல்லாதிருக்க லாம். ஆனால், அவ்வறிவின் துணேயால் ஒரு கொள்கையை ஒப்புக்கொண்டு அதன் சாயலாகவே தன் கருமங்களேச் செய்து வருபவனல்ல. எத்தனையோ ஜீவப்பிரேதங்கள், ஜீவியத்தின் நோக்கம் இன்னதென்றே அறியாமல், கேவலம் இந்திரிய பாதை களைக் கழித்துக் கொண்டு, உண்டு உடுத்தி, வாழ்ந்து இறந்து போகின்றனர். அவர்களெல்லாம். ஏதோ நல்லதோ க்ெட்டதோ கொள்கைகளைக் கடைபிடித்துக் கருமங்களே அவரவற்றிக் குரிய படி செய்து ஜீவிக்கும் மனிதர்களல்ல. ஆகையால் கொள்கை யென்பதென்ன ? ஒரு கொள்கையாவது, பகுத்தறிவின் துணையால் செய்யத் தக்கது. இது, செய்யத் தகாதது இது என்று ஒருவன் அறிந்து முன் பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனத்தால் ஒப்புக் கொள்ளும் கருமத் தொடரின் அஸ்திவார மாகிய ஒரு கருத்தாம். கம்,காட்டில் இவ்வாறு கொள்கைகளைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பலர் இருக்கிருர்கள். ஆனல் கொள்கைகளை அவாவோடு மனத்தால் கிரகித்தல் வேறு, அவற்றின்படி நடத்தல் வேறு. யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் அங்கீகரித்துக் கொண்டு அதன்படி கடக்க முடியாதவனாய் இருந்தால், அவனும் ஜீவப் பிரேதங் தான். இதிலிருந்து, கொள்கையற்ற மானிடப் பதர்கள், கொள்கை யிலிருந்தும் அதன்படி கடக்கவியலாத மானிடப் பதர்கள்' என்ற இரண்டு ஜாதிகள் உண்டென்று ஏற்படுகிறது. இவ்விரண்டு வகுப்பாரால் ஜன சமூகத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது. அவர்கள் இருக்குழ் வரை சோற்றிற்குக் கேடாகவும் நிலத்திற்குப் பளுவாகவும் இருந்து போவார்கள். ஆனால், தாங்கள் வசிக்கும் காட்டிற்குக் குடலைத் தின்னும் அரிபூச்சுகள் போல ஒரு வகுப்பார் தலையெடுத்திருக்கிருர்கள். அவர்கள் தங்கள் தலை நிறைய திவ்வியமான கொள்கைகளை