பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பாரதி தமிழ் உலகத்தார் ப்ரம்மஞானிகளென்றும், மஹரிஷிகளென்றும் புகழ் கிருர்களே ! அந்த மனிதர்களெல்லாம் மூடர்களும், துரோகிகளு மாவார்களென்று எனக்குத் தோன்றுகிறது' என்று சொல்லிக் கொண்டேன். நான் இவ்வாறு ஆலோசிப்பதை அறிந்து கொண்ட மனம், "அப்பாடா ! ' என்று பெருமூச்சுவிட்டு, தன் நடுக்கமெல்லாம் தீர்ந்து ஆறுதலுடனிருந்தது. எனக்கும் ஸ்க்தோஷம் உண்டா யிற்று. எனது மன மோஹினிக்கு ஒர் முத்தம் கொடுத்தேன். குறிப்பு:- முதல் அத்தியாயம் மட்டும் இங்கு சேர்க்கப் பட்டுள்ளது.