பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரிகையின் கதை 181 அன்புக்கும் அமைதிக்கும் சாக்திக்கும் அழகுக்கும் இலக்கிய மாகத் திகழ்ந்தது அவ்வேளாண்குடியூர் அக்ரஹாரம். அங்கு, பெண் மக்கள் எல்லாரும் மஹாஸுந்தரிகள். ஆண் மக்கள் மிகவும் நல்ல குணமுடையோர். ஆனால் பெரும்பாலும் பரம ஏழைகள். பூர்வீக சொத்து, கிலம், தோட்டம் முதலியன எல்லோருக்கும் சிறிதுண்டு. ஆனால், அதிலிருந்து வரும் வரும்படி வெறுமே போஜனத்துக்குக் கூடக் காணுது. இதில் வேஷ்டிகள், புடவை கள், ரவிக்கைகள், பாவாடைகள், குடுமிக் கலியாணம், பூணுால் கலியாணம், விவாகங்கள், ருது ஸ்கானங்கள், ருது சாந்திகள், சீமந்தங்கள், பல பல பண்டிகைகள், உற்சவங்கள், விழாக்கள் என்பன ஓயாமல் நிகழுமாதலால், அவ்வூர் கிருஹஸ்தர்கள், மேன் மேலும் தம் கிலம் முதலியன சுருங்கவும் வறுமை மேன்மேலும் வளரவும், ஏக்கம் பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், வயது முதிர்ந்தோரிடையே இத்தனை ஏக்கமும் மனக்குறையும் குடி கொண்டிருந்தன என்ற செய்தி அ வ் ஆர் க் குழந்தைகளுக்குத் தெரியாது; பrகளுக்குத் தெரியாது; கோயிலெதிரே எப்போதும் செழுமையாக வளர்ந்த புற்றரைகளில் மேய்ந்துகொண்டிருந்த பசுக்களுக்கும், கழுதைகளுக்கும் தெரியாது. இவை எப்போதும் மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும், பாட்டிலும், ஆனந்தக் களியிலும் மூழ்கிக் கிடந்தன. இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லா பிராமணர்களைக் காட்டி லும் அதிக ஏழையான மஹாலிங்கையர் என்பவர் ஒருவர் இருந் தார். அவருடைய குடும்பம் மிகப் பெரிது. வீடு மிகச் சிறிது. அவருடைய கிழத் தாய் தந்தையர் இருவர் ; விதவையான தங்கை ஒருத்தி; சுமார் முப்பது வயதுள்ள மனேவி ஒருத்தி; அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆருவது ப்ரஸ்வம் நெருங்கிய ஸ்மயம். இத்தனே பேருக்கும் ஆஹாரம் வேண்டுமே ; மஹாலிங்கை யருக்கு பூர்வ சொத்துக் கிடையாது. இளமையும், ஊக்கமும், எப்படியேனும் பணம் ஸம்பாதிக்கலாமென்ற நம்பிக்கையும் அவரை விட்டுப் பிரிந்து கெடுங்காலமாய் விட்டது. அவருக்கு சுமார் நாற்பது வயதுக்கு மேலாகவில்லை. அதற்குள்ளே குழங் தைகளின் தொகை வலியாலும், மனேவியின் வாய் வலியாலும்,