பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும்மா 39 சும்மா, சும்மா, சும்மா, சும்மா இருந்து சும்மா இருந்துதான் ஹிந்து தேசம் பாழாய்க் குட்டி சுவராய்ப் போய் விட்டதே ? இன்னம் என்ன சும்மா ? எவனைப் பார்த்தாலும் இந்த நாட்டில் சும்மாதான் இருக்கிருன். லக்ஷ லக்ஷ லக்ஷமாகப் பரதேசி, பண்டாரம், ஸங்யாஸி, சாமியார் என்று கூட்டம் கூட்டமாகச் சோம்பேறிப் பயல்கள். கஞ்சா அடிக்கிறதும், பிச்சை வாங்கித் தின்கிறதும், சும்மா உலாவுகிறதும் தான் அந்தப் பயல்களுக்கு வேலை. இரண்டு வேளே ஆஹாரம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தொழில் செய்யும் வழக்கம் இந்த தேசத்திலே கிடையாது. ஜமீந்தார், மிட்டாதார், பண்ணையார், மிராசுதார், இனம்தார், ஜாகீர்தாரி, மடாதிபதிகள், ராஜாக்கள் எல்லாருக்கும் சும்மா இருப்பதுதான் வேலை. சோம்பேறிப் பயல்களுடைய தேசம் ' என்று பலவிதமாக வேணு முதலி ஜமாய்க்கிற சமயத்தில் குள்ளச்சாமி மேற்கு முகமாக ஸாரியனே நோக்கித் திரும்பிக் கொண்டு: "சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என்றெம்மால் அறிதற்கெளிதோபராபரமே” என்ற தாயுமானவர் கண்ணியைப் பாடினர். வேணு முதலி அவரை நோக்கி : “ சாமியாரே, நீர் ஏதோ ராஜயோகி என்று காளிதாஸர் சொல்லக் கேள்விப் பட்டேன். உம்முடன் கான் பேசவில்லை, காளிதாஸரிடம் நான் சொல்லுகிறேன். ர்ே ஸ்க்யாஸி யென்று சொல்லி ஜன்மத்தையே மரத்தின் ஜன்மம் போலே யாதொரு பயனுமில்லாமல் வீணுகச் செலவிடும் கூட்டத்தைச் சேர்ந்தவர். மரமாவது பிறருக்குப் பழங்கள் கொடுக்கும், இலே கொடுக்கும், விறகு கொடுக்கும். உங்களை மரத்துக் கொப்பாகச் சொல்லியது பிழை. உங்களாலே பிறருக்கு கஷ்டம்; மரத்தால் பிறருக்கு எத்தனையோ லாபம் ' என்ருன். இங்ங்னம் வேணு முதலி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குள்ளச் சாமியார் : சும்மா இருக்கச் சுகம் சுகமென்று சுருதியெல்லாம் அம்மா கிரந்தரம் சொல்லவுங் கேட்டு அறிவின்றியே பெம்மான் மவுனி மொழியையுங் தப்பி என் பேதமையால் வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அங்தோ என் விதி (வசமே 1” என்று தாயுமானவருடைய பாடலொன்றைச் சொன்னர்.