பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாரதி தமிழ் " நான் கிருதயுகத்தை ஸ்தாபனம் செய்வேன். நானே பரம புருஷன். இதற்கு முன் ஆசார்யர்கள் உங்களிடம் என்ன சொன்னர்கள் ? எல்லா உயிரும் ஒன்று. ஆதலால் காக்கை, புழு முதலிய ஐந்துக்களிடம் குரூரமில்லாமல் கருணை பாராட்டுங்கள் என்றனர். " அடா, வேனு முதலி, கவனி. ' சைவாசார்யர் வைஷ்ணவத்தை விலக்கினர். வைஷ்ணவா சார்யர் சைவத்தை விலக்கினர். " நான் ஒன்று செய்வேன். 'காக்கையைக் கண்டால் இரக்கப்படாதே, கும்பிடு. கைகூப்பி நமஸ்காரம் பண்ணு! பூச்சியைக் கும்பிடு! மண்ணேயும் காற்றை யும் விழுந்து கும்பிடு! என்று நான் சொல்லுகிறேன். 'நான் வேதத்தில் முன் சொன்ன வாக்கை இப்போது அனு பவத்திலே செய்து காட்டப் போகிறேன். புராணங்களை யெல்லாம் விழுங்கி ஒன்ருக காட்டப் போகிறேன். ஹிந்து தர்மத்தைக் கூட்டப் போகிறேன். அடா, வேணு முதலி கேள், மண்ணும் காற்றும், ஸுரியனும், சந்திரனும், உன்னேயும் என்னை யும் சூழ்ந்து கிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்று வேதம் சொல்லிற்று. இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வமில்லை. நம்முன்னே காண்பது நாராயணன். இதை நம்முள்ளே நாட்டி இதை வணங்கி இதன் தொழுகைக் களியில் மூழ்கி, அங்கு மானுடன் தன்னே முழுதும் மறந்து விடுக. " அப்போது தன்னிடத்து நாராயணன் நிற்பான். இந்த வழியை நான் தழுவியபடியால் மனுஷ்யத் தன்மை நீங்கி அமரத் தன்மை பெற்றேன். ஆதலால் நான் தேவய்ைவிட்டேன். இவைதான் தெய்வம், இதைத் தவிர வேறு தெய்வமில்லை. தேவர்களுக்குள்ளே நான் அதிபதி, என் பெயர் விஷ்ணு ; கானே சிவன் மகன் குமாரன், நானே கணபதி, நான் அல்லா, யேஹோவான், நானே பரிசுத்த ஆவி, நானே யேசுகிருஸ்து, நானே கந்தர்வன், நானே அஸ்-ரன், நான் புருஷோத்தமன், நானே ஸ்மஸ்த ஜீவராசிகளும். " நானே பஞ்ச பூதம் ! அஹம் ஸத் ! நான் கிருத யுகத்தை ஆக்ஞாபிக்கிறேன் ! ஆதலால் கிருதயுகம் வருகிறது. எந்த