பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இருள் வித்யா நகரம் என்ற பட்டணத்தில், எண்ணுாறு வருஷத் துக்கு முன், திடசித்தன் என்று ஒரு ராஜா இருந்தான். அவ னுடைய பந்துக்களிலே சிலர் விரோதத்தினல் அவனுக்குப் பல தீங்குகள் செய்யலாயினர். ஒரு காள் அவன் கித்திரை செய்யும் போது எதிரிகள், அரண்மனை வேலைக்காரரிலே சிலரை வசமாக்கி உள்ளே நுழைந்து அவன் கால்களைக் கட்டி எடுத்துக் கொண்டு போய், சமீபத்திலிருந்த மலேச்சாரலில் ஒரு குகைக்குள்ளே போட்டு வெளியே வர முடியாதபடி ஒரு பாறையால் மூடி வைத்து விட்டார்கள். இவ்வளவுக்குமிடையே அவன் கண் விழிக்காதபடி மூக்கிலே ஒரு மயக்கப் பச்சிலையின் சாற்றைப் பிழிந்து விட்டார் é©Ꭲ , நெடுநேரம் கழிந்த பிறகு, பச்சிலையின் மயக்கம் தெளியவே அரசன் கண்ணே விழித்துப் பார்க்கும்போது, கை கால்கள் கட் டுண்டு, தான் பேரிருளிலே கிடப்பதை உணர்ந்து கொண்டான். ' எங்கிருக்கிருேம்? ' என்று சிந்தித்தான். இடம் தெரியவில்லை. - நமக்கு யார் இவ்விதமான தீமை செய்திருக்கக்கூடும் ?' என்று யோசனை செய்து பார்த்தான். ஒன்றும் தெளிவாக விளங்க வில்லை. எழுந்து கிற்க முயற்சி செய்தான். சாத்தியப்படவில்லை. தாகம் காக்கை வறட்டிற்று, கண்கள் சுழன்றன. நெஞ்சு படீல் படீலென்று புடைத்துக் கொண்டது. "தெய்வமே, என்னேக் கொல்லவா நிச்சயித்துவிட்டாய் ?” என்று கூவினன். " ஆம்' என்ருெரு குரல் கேட்டது. 'ஆ மென்கிருயே, நீ யார் ? ' என்று வினவினன். " நான் காலன். உன் உயிரைக் கொண்டு போக வந்திருக் கிறேன்” என்று அந்த மறை குரல் சொல்லிற்று. அப்போது திடசித்தன் : “ நான் யெளவனப் பருவத்தில் இருக்கிறேன். அறிவிலும் அன்பிலும் சிறந்த எனது மனேவி யையும், சிங்கக்குட்டி போன்ற என் மகனையும் செழிப்பும் புகழும்