பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாரதி தமிழ் மீண்டும் கேட்டது. உடம்பிலிருந்த துணியைக் கிழித்து, மண்ணிலே புரட்டி அதிக ரத்தம் கால் விரலிலிருந்து விழாதபடி சுற்றிக்கொண்டான். மறுபடியும் செய்' என்ற தொனி பிறந்தது. தளைகளை வாளால் வெட்டிவிட்டான். அப்போது அவனுடைய சரீரத்திலே மறுபடியும் ஆயாஸ் முண்டாயிற்று. அப்படியே சோர்ந்து விழுந்தான். ஜ்வரம் வந்து விட்டது. மரண தாகமுண்டாயிற்று. ' ஐயோ தாகம் பொறுக்கவில்லையே, என்ன செய்வேன்?' என்று புலம்பினன். ' மந்திரத்தை ஜபம் பண்ணு' என்றது அசரீரி. "கரோமி, கரோமி, கரோமி” என்று தாய் மந்திரத்தை மறுபடி ஜபித்தான். ' செய்' என்று கட்டளை பிறந்தது. “என்ன செய்வது ? " என்றேங்கினன். "சோர்வடையாதே, செய்கை செய்' என்றது தொனி. “ என்ன செய்வது ? ' என்று பின்னெரு முறை கேட்டான். ' கல்லிலே முட்டு ' என்று கட்டளை பிறந்தது. எழுந்துவந்து குகையை மூடியிருந்த பாறையிலே போய் முட்டினன். மண்டையுடைந்து செத்தால் பெரிதில்லையென்று துணிவுகொண்டு செய்தான். மண்டை உடையவில்லை. குகையை மூடிச் சென்றவர்கள் அவசரத்தாலே அந்தக் கல்லே மிகவும் சரிவாக வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். பாறை சரிந்து கீழே விழுந்துவிட்டது. வெளியே வந்து பார்த்தான். குர்யோதயம் ஆயிற்று. கரோமி, கரோமி, கரோமி செய்கிறேன், செய் றேன், என்று சொல்லிக்கொண்டு தனது ராஜதானி போய்ச் சேர்ந்தான். பிறகு அவனுக்கோர் பகையுமில்லை.