பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புதிய கோணங்கி (அதாவது குடுகுடுப்பைக்காரன்) வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப் பட்டிருக்கிருன். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாள பேதங்களும், அவற்றிலே பல விக்கியாசங்களும் காட்டுகிருன். தாள விஷயத்திலே மஹா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளே வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டிருக்கிருன். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிருன். பாகையைப் பார்த்தால் கெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு, மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்ருகப் பொருந்தியிருக்கிறது. ஆள் கெட்டை , தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியி ருக்கிருன். நேற்றுக் காலேயிலே, அவன் கம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வது போலச் செய்கிருன், கல்ல கெட்டிக்காரன். அவன் சொன்னன் : ' குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு ; நல்ல காலம் வருகுது ; நல்ல காலம் வருகுது; ஜாதிகள் சேருது ; சண்டைகள் தொலையுது ; சொல்லடி, சொல்லடி, சக்தி மாகாளி, வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு , தரித்திரம் போகுது, செல்வம் வருகுது ; படிப்பு வளருது, பாவம் தொலையுது ; படிச்சவன் குதும் பாவமும் பண்ணில்ை போவான், போவான் , ஐயோவென்று போவான், வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது ;