பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாரதி தமிழ் சந்தேகம் . ஸ-ஸ-ஸ்” என்ருர். பிறகு அர்ஜுனன் பீஷ்மாசார்யரிடம் போனன். " சண்டை நல்லதா தாத்தா?' என்று கேட்டான். அப்போது கங்கா புத்திர கிைய அந்தக் கிழவனர் சொல்லுகிருர் : “ குழந்தாய், அர்ஜூன. சமாதானமே நல்லது. சண்டையில் கம்முடைய கடித்திரிய குலத் திற்கு மஹிமையுண்டு. சமாதானத்தில் லோகத்துக்கே மஹிமை” என்ருர். " நீர் சொல்லுவது நியாயமில்லே ' என்று அர்ஜூனன் சொன்னன். காரணத்தை முதலாவது சொல்ல வேண்டும், அர்ஜூன, தீர்மானத்தை அதன் பிறகு சொல்ல வேண்டும்” என்ருர் கிழவர். அர்ஜுனன் சொல்லுகிருன் : “ தாத்தாஜி, ஸமாதானத்தில் கர்ணன் மேலாகவும் நான் தாழ்வாகவும் இருக்கிருேம். சண்டை கடந்தால் உண்மை வெளிப்படும்” என்ருன். அதற்கு பீஷ்மாச்சாரியர் : “ குழந்தாய், தர்மம் மேன்மை யடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும், தர்மம் வெல்லத்தான் செய்யும். ஆதலால் உன் மனதில் கோபங்களே நீக்கி சமாதானத்தை நாடு. மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன் பிறந்தாரைப்போல. மனுஷ்யர் பரஸ்பரம் அன்போடிருக்க வேண்டும். அன்பே தாரகம். முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம்” என்று சொல்லிக் கண்ணிர் ஒரு திவலே உதிர்த்தார். சில தினங்களுக் கப்பால் அஸ்தினபுரத்துக்கு வேதவியாஸர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் போய்ச் சண்டை நல்லதா, சமதானம் கல்லதா என்று கேட்டான். அப்போது வேதவியாஸர் சொல்லுகிருர் : ' இரண்டும் நல்லன. சமயத்துக்குத் தக்கபடி செய்ய வேண்டும் ' என்ருர். பல வருஷங்களுக்கப்பால் காட்டில் இருந்து கொண்டு துர்யோத திைகளுக்குத் தூது விடுக்கு முன்பு, அர்ஜுனன் ரீ கிருஷ்ணனே அழைத்து, "கிருஷ்ணு, சண்டை நல்லதா சமாதானம் நல்லதா?” என்று கேட்டான். இதற்குக் கிருஷ்ணன்: ‘'இப்போதைக்கு சமாதானம் நல்லது. அதனலேதான் சமாதானம் வேண்டி ஹஸ்தினபுரத்திற்குப் புறப்படப் போகிறேன்” என்ருராம்.