பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாரதி தமிழ் என்னை அவர்களால் கவனிக்க முடியவில்லை. இப்படியிருக்கையிலே அங்கு இருபது வயதுள்ள ஒரு மலே யாளிப் பையன் பெருங்காயம் கொண்டு வந்தான். சில்லறையில் பெருங்காயம் விற்பது இவனுடைய தொழில். இவன் பலமுறை அந்தக் கிராமத்துக்குப் பெருங்காயம் கொண்டு வந்து விற்பதை நான் பார்த்திருக்கிறேன். இவனைப் பற்றி வேருென்றும் நான் விசாரித்தது கிடையாது. இவன் பார்வைக்கு மன்மதன் போலிருந் தான். கரிய விழிகளும், நீண்ட மூக்கும், சுருள் சுருளான, படர்ந்த உச்சிக் குடுமியும்-அவனேக் கண்டபோது எனக்கே மோஹமுண்டாயிற்று. அந்த மலையாளி கிணற்றருகே வந்து உட்கார்ந்து கொண்டு கிழவியிடம் தாஹத்துக்கு ஜலங் கேட்டான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் காந்தாமணி நடுங்கிப் போனதைக் கவனித்தேன். அப்பால் அந்த மலையாளி காந்தாமணியை ஒருமுறை உற்றுப் பார்த்தான். அவள் தன் இடுப்பிலிருந்த குடத்தை நீரோடு கழுவ விட்டு விட்டாள். அது தொப்பென்று விழுந்தது. காந்தாமணி அதைக் குனிந்தெடுத்து ஐயோ, நான் என்ன செய்வேனம்மா ? குடம் ஆரங்குல ஆழம் அமுங்கிப் போய்விட்டதே ? எங்கம்மா எனக்குத் துரக்குத் தண்டனை விதிப்பாளே ? 'என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள். மார்புத் துணியை நெகிழவிட்டாள். பொதியை மலைத் தொடரை நோக்கிள்ை. இந்தக் காந்தாமணி மேற்படி மலையாளிப் பையனிடம் காதல் வரம்பு மிஞ்சிக் கொண்டவளென்பதை நான் தொலைவிலிருந்தே தெரிந்து கொண்டேன். பின்னிட்டு விசாரணை பண்ணியதில் காந்தாமணியின் பிதாவாகிய பார்த்தசாரதி அய்யங்கார் பூர்வம் நெடுநாள் மலையாளத்தில் உத்தியோகம் பண்ணிக் கொண்டிருந்தா ரென்றும் அங்கு மிகச் சிறிய குழந்தைப் பிராய முதலாகவே காந்தாமணிக்கும், அந்த மலையாளிக்கும் காதல் தோன்றி அது காளுக்கு நாள் வளர்ந்து வருகிறதென்றும் வெளிப்பட்டன. சப்-இன்ஸ்பெக்டர் அய்யங்கார் திரவிய லாபத்தை உத்தேசித்துக் காக்தாமணியைப் பென்ஷன் டிப்டி கலெக்டரும், கந்தலாபுரம் ஜமீன் திவானுமாகிய ஐம்பத்தைந்து வயதுள்ள கோழம்பாடு