பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாரதி தமிழ் யாமல் ஜன்னல் ஒரத்திலே கொஞ்சம் கின்றேன். மழை கொட்டு கிறது. அறைக்குள்ளே எனக்கு கைகால் விரையலெடுக்கிறது. அந்தப் பண்டாரம் வஸந்த காலத்தில், மாலை நேரத்தில், பூஞ்சோலையில் ராஜகுமாரன் ஒருவன் காற்று வாங்கிக் கொண்டு ஒய்யாரமாக நடப்பது போலே (அந்தப் பண்டாரம்) அந்த மழையில் நடந்து செல்லுகிருன். பிரம்மானந்தமாகத் திருவாச கம் பாடுகிருன் : " பூசுவதும் வெண்ணிறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறை போலும் காணேடி !” இந்தப் பாட்டை அவன் பாடின. ராகம் என் மனதை விட்டு இப்போது கூட நீங்கவில்லை. மனுஷ்ய கானம் போலில்லை. தேவகானம் போலேயிருந்தது. " ஹே ! யாரப்பா பண்டாரம், நில்லு ' என்று சொல்லிக் கூவினேன். அவன் கின்ருன். ' ே போன வருஷம் திருப்பள்ளியெழுச்சி பாடி வந்தவகைத் தோன்ற வில்லையே? நீ யார் ?' என்று கேட்டேன். " நான் போன வருஷம் பாடினவனுடைய மகன். நான் பாடினது திருச்சாழல் ' என்ருன். இவன் அதிக பிரஸங்கி என்று தெரிந்து கொண்டு, " உன் பெயரென்ன ?' என்று கேட்டேன். ' என் பெயர் கெட்டை மாடன் ” என்று சொன்னன். ' சரி போ' என்று சொன்னேன். அவன் இரண்டடி முன்னே போய் மறுபடி திரும்பி வந்து " ஐயரே, உம்முடைய பெயர் என்ன ?' என்று கேட்டான். ' என் பெயர் காளிதாசன் ” என்று சொன்னேன். " ஓஹோ ? பத்திரிகைக்குக் கதைகள் எழுதுகிருரே, அந்தக் காளிதாசன் நீர் தானே?’ என்ருன். " ஓஹோ ? இவன் பத்திரிகை படிக்கிருன?' என்றெண்ணி வியப்புற்று, நான் அவனிடம் ' தம்பி, கெட்டை மாடா, உனக்கு சங்கீதம் யார் கற்றுக் கொடுத்தார்கள்? நீ இதுவரை எந்த ஊரிலே வளர்ந்தாய் ?” என்று கேட்டேன். அப்போது கெட்டை மாடன் சொல்லுகிருன் : ' ஏ, ஐயரே, நான் மழையில் கிற்கிறேன். நீ அறைக்குள் கின்று கொண்டு என்னிடம் நீண்ட கதை பேசுகிருயே. மேல் தளத்திலிருந்து கீழே இறங்கிவா, வாசல் திண்ணையில் உட்