பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் 77. கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே வாத்தியார் கர்ஜனே அட்டஹாஸ்மாக கடந்து கொண்டிருந்தது. கேட்டுக் கொண்டி ருந்தவர்களின் ஜாப்தா' பின்வருமாறு: (1) வீராசாமி நாயக்கர். (இந்த நாயக்கர் ஆனைக் குட்டியைப் போலிருப்பார்; சர்க்கார் உத்தியோகம்; முப்பத்து மூன்று வயது; அதற்குள் சரியான வழுக்கை நல்ல வ்யவஹார ஞானமுடையவர்; வாய் பேசுவது கிடையாது; கோபம் வருகிற, போது கொஞ்சம் பொடி யெடுத்து மூக்கில் போட்டுக் கொள்வார். (2) கொங்கண பட்டர். (இவர் பெருமாள் கோயில் பட்டர், ஏழரையடி உயரம்; இவரை யார் வேண்டுமானலும் வையலாம்; வேஷ்டியைப் பிடித்திழுக்கலாம். மேற்படி வீராசாமி காயக்கர் இவருடைய தலையில் கால்மணி நேரத்திற் கொருதரம் குட்டுவார். இவருக்குக் கோபம் வராது. இவருடைய ஜாதகத் திலே கோபத்துக்குரிய கிரகம் சேரவில்லையென்று கேள்வி.) (3) நாராயண செட்டியார் (பணக்காரர். குள்ளம். வட்டிக்குக் கொடுக்கல் வாங்கல், இடிப்பள்ளிக் கூடம்-இந்த இரண்டு தொழிலையுங் தவிர மூன்ருவது காரியத்தை இவர் கவனிப்பதே கிடையாது. வாரத்துக் கொருமுறை வெள்ளிக் கிழமையன்று பிள்ளையார் கோவிலுக்குப் போவார். மற்றப்படி வீட்டை விட்டு வெளியே போகமாட்டார். இவரை அந்தப்புரச் செட்டியாரென்றும் சொல்வார்கள்.) (4) குருசாமி பாகவதர். (ஸங்கீத வித்வான்; குழந்தை களுக்குப் பாட்டும், வாத்தியமும் சொல்லிக் கொடுப்பார். சாரீரம் கட்டை.) மேற்படி சபையில் நானும் போய்ச்சேர்ந்தேன். பிரமாய வாத்தியாருக்கு என்னேக் கண்டவுடன் கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டது. 'வாருங்கள், வாருங்கள். உங்களுக்கும் ரஸப்படக்கூடிய விஷயங்தான் பேசிக் கொண்டிருக்கிருேம்” என்ருர். 'அதாவது என்ன விஷயம் ?' என்று கேட்டேன். “ஸ்திரீகளுடைய பேச்சு' என்ருர். "ஸ்திரீகளைப் பற்றிய பேச்சா? சரிதான். மேலே உபங்யாஸம். நடக்கட்டும்' என்றேன்.