பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் 79 ஹிந்து ஸ்திரீ ஏறக்குறைய அடிமை கிலேமையிலிருக்கிருள். கம் முடைய வீடுகளில் அறைக்குள் அடைத்து வைப்பது கிடையாது. அறைக்குள்ளே தான் இருந்தாலென்ன, குடிகெட்டிப் போச்சுது? அடிமையைத் தண்ணிர் கொண்டுவர தெருவிலே விட்டால்தான் என்ன, அதுவும் கூடாதென்று கதவைப் பூட்டிக் கைதியாக வைத் திருந்தாலென்ன ? எந்த நிலைமையிலிருந்தாலும் அடிமை அடிமை தானே ஸ்வாமி மனுஷ்ய ஜீவனுக்கு இரண்டு வித நிலைமை தான் உண்டு. எதுவும் தன்னிஷ்டப்படி செய்து, அதனால் ஏற் படக்கூடிய இன்ப நஷ்டங்களுக்குத்தான் பொறுப்பாளியாக இருப்பது ஒரு கிலேமை. அதுதான் சுதந்திரம். அப்படி இல்லாமல் பிறர் இஷ்டப்படி தான் இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் மீறி நடக்கக் கூடாதபடி கட்டுப்பட்டிருத்தல், அடிமை கிலே. அந்த ஸ்திதியில் கம்முடைய ஸ்திரீகளை வைத்திருக்கிருேம். சும்மா பொய்க் கதை சொல்வதில் பிரயோஜனமென்ன, ஸ்வாமி ? நம் முடைய ஸ்திரீகள் அடிமைகள். அதிலே சந்தேகமில்லை. ஹிந்துக்களுக்குள்ளே புருஷர்களுக்கே அரசாட்சியில் வாக்குச் சீட்டுக் கிடையாது. அவர்களுக்குள்ளே ஸ்திரீகள் அடிமைகள். ஹிந்து ஸ்திரிகளைக் காட்டிலும் இப்போது துருக்கி ஸ்திரீகள் நல்ல நிலைமையில் வந்திருக்கிருர்கள். மிஸ் எல்லிஸன் என்ருெரு இங்கிலீஷ்காரி ஒரு புஸ்தகம் போட்டு, நேற்றுத்தான் ஒரு பத்தி ரிகையில் அந்த புஸ்தகத்தைப் பற்றி அபிப்பிராயம் போட்டிருக் தது. அந்த அபிப்பிராயம் எழுதினவர் ஒரு சிங்களத்துப் பெளத்தர். அவர் பெயர் ஜினராஜதாஸர். அவர் ஒரு இங்கிலீஷ் காரியைக் கலியாணம் பண்ணிக் கொண்டிருக்கிருர். துருக்கி ஸ்திரீகள் படிப்பு, ராஜ்யப் பொறுப்பிலே ஊக்கம் முதலிய சகல அம்சங்களிலேயும் போதுமானபடி விருத்தியாய்க் கொண்டு வருவ தாக அந்த இங்கிலீஷ் புத்தகத்தில் போட்டிருப்பதாக அந்த பெளத்தர் சொல்லுகிருர். ஐயோ. ராமா, ராகவா, கேசவா, விசு வாமித்ரா !-நமக்கு ஸந்தியா வந்தனம் கொஞ்சம் மறதி ! " இங்ங்னம், அவர் பிரசங்கத்தில் கொஞ்சம் மூச்சு வாங்கும் பொருட்டாக ஒரு விகட வார்த்தை சொன்னவுடனே, அவருடைய முக்கிய சிஷ்யராகிய கொங்கண பட்டர் கொல்லென்று சிரித்தார்.