பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

102 நாட்டில் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர் யார் எனில், அவர்தாம் திருவள்ளுவர். திருவள்ளுவர் காலத்திற்குப்பின், இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் அவருக்கு இப்பொழுது இருக்கும் அளவிற் குத் தமிழ் நாட்டில் விளம்பரம் இல்லை. உலகின் பல்வேறு மொழியினர் தத்தம் மொழிகளில் திருவள்ளுவரின் திருக் குறளை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பினும், வட இந்தியாவில்-மட்டுமன்று தென்னிந்தியாவில் தமிழர்கட்கே திருவள்ளுவர் அறியாப் பொருளாக இருந்தார். ஒரு தோற் றம் ஐம்பது ஆண்டு காலமாகத்தான் நாம் திருக்குறளைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். திருவள்ளுவர்க்கே இந்த நிலை எனில், பாவேந்தர் நிலை என்னாகும்-நாம் விழிப்பா யிராவிடின். திருவள்ளுவரினும் சிறந்த ஒரு பொருள் தமிழ்நாட் டில் மறைக்கப்பட்டிருந்தது. இன்னும், சிறுபான்மை வெளி யிலே கொண்டு வரப்பட்டிருப்பினும், பெரும்பான்மை மறைக்கப்பட்டேயிருக்கிறது. அந்தப் பொருள் எது எனில், தமிழ் மொழிதான் அது. தமிழகத்தில் கடந்த சில நூற்றாண்டுகளாகத் தமிழ் எந்தத்துறையிலும் இடம் பெறவில்லை. இந்த நூற்றாண் டில் மானமுள்ள தமிழர்கள் சிலரின் முயற்சியால் தமிழ் ஒரளவு தலைகாட்டிக்கொண் டிருக்கிறது. தமிழுக்கு இன் னும் தமிழகத்தில் உரிய இடம் கிடைக்கவில்லை. இந்த நிலைமையை இப்படியே விடின், மீண்டும் தமிழ் முழு அளவில் மறைக்கப்பட்டுவிடும். எனவே, தமிழுக்கே இந்த நிலை எனில், நாம் விளம் பரப்படுத்திக்கொண்டு இருக்காவிடின் பாவேந்தரின்