பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

112 6. எட்டிய மட்டும் கிழக்குத் - திசை ஏற்றிய எங்கள் விழிக்குப் பட்டது கொஞ்சம் வெளிச்சம் - அன்று பெளர்ணமி என்பதும் கண்டோம். வட்டக் குளிர்மதி எங்கே - என்று வரவு நோக்கி யிருந்தோம். ஒட்டக மேல் அர சன்போல் - மதி ஒர்மரத் தண்டையில் தோன்றும். 7. முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று முற்றும் சிவந்தது சொல்வாய். இத்தனை கோபம் நிலாவே - உனக்கு ஏற்றிய தாரென்று கேட்டோம். உத்தர மாகஎம் நெஞ்சில் - மதி ஒன்று புகன்றது கண்டீர் சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால் திரும்பிப் பார்த்திட்ட போது. 8. தோணிக் கயிற்றினை ஒர் ஆள் - இரு தோள்கொண் டிழுப்பது கண்டோம். காணச் சகித்திட வில்லை - அவன் கரையொடு நடந்திடு கின்றான். கோணி முதுகினைக் கையால் - ஒரு கோல்நுனி யால் மலை போன்ற தோணியை வேறொரு வன்தான் - தள்ளித் தொல்லை யுற்றான்பின் புறத்தில். 9. இந்த உலகினில் யாரும் - நல் இன்ப மெனும்கரை ஏறல்