பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18 ஆசிரியர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தாராம். குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கட் டாயம் கூட்டத்திற்கு வரவேண்டுமாம். அவ்வாறே ஆசிரியர்கள், குறித்த நாளில் துறைத் தலைவரின் வீட்டில் சென்று அமர்ந்திருந்தனராம். அப் போது, கவிஞர் கதராடையும் காந்தி குல்லாவும் அணிந்து கொண்டு போய் ஆசிரியர்களுடன் அமர்ந்தாராம். ஆசிரியர் கள் கவிஞரைப் பார்த்து, டேய் சுப்புரத்தினம்! இந்த உடை யுடன் இங்கே இருக்காதே - போய் வேறு உடை உடுத்திக் கொண்டு வா - அல்லது வீட்டுக்குப் போய் விடு - துரை (கல்வித் துறைத் தலைவர்) வந்து பார்த்தால் உன்னைத் தொலைத்து விடுவான் - உன் வேலைக்கே சீட்டுக் கிழித்து விடுவான்-எழுத்து போ போ' - என்று வற்புறுத்தினார் களாம். ஆனால் கவிஞர் சிறிதும் அசைந்து கொடுக்க வில்லை யாம்; துரை வந்து பார்க்கட்டும் - எனக்குச் சீட்டுக் கிழிக் கட்டும் - நான் எதற்கும் தயார் என்று கூறினாராம். மீண்டும் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டும் கவிஞர் நகராமல் ஒரே உறுதியுடன் இருந்து விட்டாராம். பின்னர்ச் சிறிது நேரத்தில் பிரெஞ்சுக்காரத் தலைவர் ஆசிரியர்கள் அமர்ந்திருந்த கூட்டத்துக்கு வந்தாராம். வந்ததும் கவிஞர் சுப்புரத்தினத்தை நெடுநேரம் ஏற இறங்கக் கவனித்துப் பார்த்தாராம்; பிறகு அவ்விடத்தி னின்றும் அகன்று உள்ளே சென்றாராம். தலைவர் உள்ளே சென்றதும், ஆசிரியர்கள் மிகவும் அஞ்சி, கவிஞரை நோக்கி, டேய் சுப்புரத்தினம்! பார்த் தாயா? துரை எதற்கு உள்ளே போயிருக்கிறான் தெரி