பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

5 எனவே, இந்நூல் எழுந்ததற்குத் தோன்றாத் துணைக் காரணமானவர்-துரண்டுகோலாயிருந்தவர் புதுவை மையப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உயர்திரு டாக்டர் கி.வேங்கட சுப்பிரமணியனார் அவர்களே. முதற்கண் அவர்கட்கு என் நன்றியைச் செலுத்துகிறேன். இது தற் செயலான தூண்டுதலாகும். பாரதிதாசனாரைப் பற்றிப் பலர் பல கோணங்களில் பல நூல்கள் எழுதியுள்ளனர். வாய்ப்பு நேருங்கால் யானும் ஓர் ஆய்வுநூல் எழுதி வெளியிட விரும்புகிறேன். இந்த நூல் எழுதியது-அச்சிட்டது-எல்லாம் இரண்டு வாரக் குறுகிய காலத்திற்குள்ளேயாம். நூலை நன்முறை பில் விரைந்து அச்சிட்டுத் தந்த அண்ணாமலைநகர் கே.பி.டி. அச்சகத்தாருக்கு என் அன்பு கலந்த நன்றி உரிய தாகும். இந்த நூலுக்குப் போதிய ஆதரவு அளிக்கும் வண் ணம், பல ஊர்களிலும் உள்ள கல்வித்துறையினரைக் கேட் டுக் கொள்கிறேன். நூலை இந்த விழாவில் வெளியிட ஏற்பாடு செய்தமைக் காகத் துணைவேந்தர் அவர்கட்கு மீண்டும் ஒருமுறை நன்றி செலுத்துகிறேன். வணக்கம் - சுந்தர சண்முகன்