பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதிப்புரை



மகாகவி பாரதியின் வரலாற்றை முதன்முதலில் அறிஞர் வ.ரா. எழுதினார். அதற்குப் பிறகு உரைநடையிலும் கவிதையிலும் பலரும் எழுதியுள்ளனர்.

குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில், எளிய நடையில் , இனிய கவிதை நடையில் பாரதி வரலாற்றைக் கவிஞர் முருகுசுந்தரம் படைத்தளித்துள்ளார்.

ஓவியர் கோபண்ணா அற்புதமான படங்களைத் தீட்டியுள்ளார்.

தமிழ்நாட்டுக் குழந்தைச் செல்வங் கள் மட்டுமல்ல, எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக் கொண்டுள்ள ஆர்வமுள்ள அறிவொளிப் பெரியவர்களும் இந்த நூலைப் படித்துப் பயனடைய வேண்டும் என்று விரும்புகிறோம்.