பக்கம்:பாரதி லீலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பனே துங்கின்மீது அவருக்கு உயிர் ஷெல்லிமீது அவருக்கு அன்பு. ஷெல்லியின் கவிதை, கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், தாயுமானர் பாடல் ஆகிய புத்தகங்கள் சதா அவர்கையிலிருக்கும். சில பெண்கள் உண்டு. ஒரு பாட்டுப்பாடு ' என்று யாராவது கேட்டு விட்டால் அப்பொழுது தான் பிகு பண்ணிக் கொள்வார்கள். அக்த பிகு நம்ம பாரதியாரிடம் கிடையாது. பாடு: என்று யாராவது கேட்டால் உடனே பாட ஆரம் பித்துவிடுவார். பெரிய தொனி. டக் டக் என்று தாளம் விழும் அவர் பாடும் பொழுது. அர்த்தம் கன்முக விளங்கும்; உணர்ச்சி பொங்கும்! தோற்றம் நடுத்தர உயரம் ; மா நிறம் சுழலும் கண்கள் ; அகன்ற சுெற்றி, அதிலே குங்குமப் பொட்டு ; துடிதுடிக்கும் உதடு, ஒயாது பாடும் வாய் ; கறுத்து அடர்ந்து முறுக்கி விடப்பட்ட மீசை, தலையிலே சிவப்புத்துணியால் கட்டப்பட்ட பெரிய முண்டாசு ; அதிலிருந்து வால் தொங்கும் ; ஒரு கிழிந்த கோட்டு ; கையிலே புத்தகம் : இராணுவ விரன் போன்ற அளந்த நடை. இதுதான் பாரதியாரின் தோற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/63&oldid=816584" இலிருந்து மீள்விக்கப்பட்டது