பக்கம்:பாரதி லீலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 “.......................................வானாரே ஈடறியா மேன்மையழ கேய்ந்தவாே, பெண்மைதான் எப்பிறப்புக் கொண்டாலும் ஏந்தலே சின்னழகைத் தப்புமோ மையல் தடுக்குக் தாமாமோ ? மண்ணிலுயிர்க் கெல்லாங் தலைவரென மானிடரே எண்ணிகின்ருர் தம்மை; எனிலொருகால், ஊர்வகுத்தல் கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில வாயிலிலே யந்த மனித ருயர்வெனலாம். மேனி யழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, வானார்தஞ் சாதிக்கு மாந்தர்சிக ராவாரோ ? ஆன வாையு மவர்முயன்று பார்த்தாலும், பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி யெதிருமக்கு வந்தாலும், மீசையையும் தாடியையும் விங்தைசெய்து வானரர்தம் ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும் ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத் தெரியாமல் எணிவைத்துச் சென்ருலும், வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே வானார் போலாவரோ ? வாலுக்குப் போவதெங்கே? ஈனமுறுங் கச்சை யிதற்கு நிகராமோ ? பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கங்தைபோல் வேகமுறத் தாவுகையில் வீசி யெழுவதற்கே தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ ? சைவசுத்த போசனமும் சாதிரியப் பார்வைகளும் வானார்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ? வானார் தம்முள்ளே மணிபோ லுமையடைந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/68&oldid=816589" இலிருந்து மீள்விக்கப்பட்டது