120 பாரதீயம்
பாரதியார் மரபுக் கவிதைகளை எளிமையாக்கினதோடன்றி வசன கவிதைகளையும் எழுதித்தமிழில் புதிய கவிதைச் சோதனைகளை மேற்கொண்டார்; செய்யுள் வடிவ உடைப்பை மேற்கொண்டுட முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சு வெளிவருவதுபோல்-வசன கவிதைகளை எழுதி வெளியிட்டார். இதனைத் தெளிவுறுத்தும் போக்இல்,
1.ண்டிதர்கள் கடத்திச் சென்ற பைந்தமிழ்க் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்த காவல் நிலையம்..... 5
புதுக்கவிஞர் ஒருவர் கிண்டல் செய்கின்றார். இன்னொரு புதுக் கவிஞர் முத்தொள்ளாயிரப் பாணியில்,
அன்று மணிக்கதவை தாயர் அடைக்கவும் மகளிர் திறக்கவும் செய்தார் மாறிமாறி: எனறும் புலவர் அடைப்பு கவிஞர் திறப்பார்ே
என்று இந்நிலையைக் காட்டுவார். புலவர் அடைத்த கவிதைத் திருக் கதவத்தைக் சவிஞர் வந்து திறக்கும் புதுமுயற்சியாகத் தமிழ் வசன கவிதை முயற்சிகள் அமைந்தன என்பது இக்க விஞர் பெறவைக்கும் குறிப்பாகும். - - -
பாரதியின் வசன கவிதைகள் : பாரதியார்தான் முதன் முதலாக மேனாட்டார் பாணியில் வசன கவிதையைத் தோற்று வித்தவர். இவரைத் தமிழில் வசன கவிதையின் தந்தை என்று கூறுவ திலும் தவறு இல்லை. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் போன்றவற்றை எடுத்துக்காட்டிப் பாரதிக்கு முன்னர் - மிகப் பண்டைக் காலத்திலேயே - வசன கவிதை இருந்துள்ளது என்று நிலைநாட்ட முயல்வது பொருத்தமன்று. ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வேறு; வசன கவிதை’ வேறு. செய்யுளின்
5. கவிஞர் வாலி : பாரதி ஒரு பிள்ளையார் சுழி (கல்கி
விடுமுறைச் சிறப்பு ம்லர்-1981) 6. மணி, சி : வரும் போகும்.