fo பாரதீயம்
பயமெனும் பேய்தனை அடித்தோம்- பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்’
என்று ஜயபேரிகை கொட்டி முழக்குகின்றார். மாயையைப் பழித் தல்’ என்ற பாடலில்,
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!- இந்தத்
தேகம் பொய்யென் றுணர்தீ ரரைஎன்
செய்வாய்?
என்று தம் அஞ்சாமையைத் தெரிவிக்கின்றார். இதே பாடலில் நாவுக்கரசரை நினைவுறுத்தும் பாங்கில்,
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!- உன்றன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை
என்று வீர முழக்கம் செய்கின்றார்.
சித்தி னியல்பும் அதன்பெருஞ் சக்தியின்
செய்கையும் தேர்ந்து விட்டால்-மனமே! எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ?* என்று தெளிவு பெற்றவரல்லவர்? சிறுவர்க்கு நீதி உரைக்கும் பாங் கில், எடுத்த எடுப்பில் அச்சந்தவிர் என்று புதிய ஆத்தி: சூடியைத் தொடங்குகின்றார். இதில்,
பேய்களுக்கு அஞ்சேல் ரெளத்திரம் பழகு.??
என்ற அறவுரைகளும் அச்சத்தைத் தவிர்க்கச் செய்யும் அறவுரை களாகும். பாப்பாவை நோக்கி,
பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
22. வே. பா. ஜயபேரிகை-1. 23. டிெ. மாயையைப் பழித்தல். 24. டிெ : தெளிவு-3. 25. ப. பா. : புதிய ஆத்தி சூடி.