பாடல்களில் படிமங்கள் i 79
என்பதில் அன்னையர் கூறும் மழலை மொழிகள் கேட்கின்றன :ைல்லவா?
இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்
தாவிக் குதிப்பாள்ளம் அன்னை’
இதில் ஏற்றும் அலைத்திரளின் ஒலி கேட்கின்றது. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சியில் ஒரு பாடல்:
புள்ளினம் ஆர்த்தன: ஆர்த்தன முரசம்;
பொங்கியது எங்கும். சுதந்திர நாதம்:
வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்!
வீதியெ லாம்.அணு குற்றனர் மாதர்:
தெள்ளிய அந்தணர் வேதமும், நின்றன்.
சீர்த்திரு நாமமும் ஒதிநிற் கின்றார்; (2)
இப்பாடலைப் படிக்கும்போதே நம் மனக்காது புள்ளினத்தின் ஆர்ப் பையும், முரசத்தின் ஆர்ப்பையும், சுதந்திர நாதத்தையும், சங்கின் முழக்கத்தையும், அந்தணரின் வேத ஒலியையும் கேட்கின்றதன்றோ?
கூறு படப்பல கோடி அவுனரின் கூட்டத்தைக்-கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
நகைத் திடுஞ் சேவலாய் !! :
இதில் வேலன் சேவலின் கொக்கரிப்பொலி நம் மனக் காதில் விழு கின்றது.
சுவைப்புலப் படிமங்கள் : இவ்வகைப் படிமங்கள் அரியன வாகவே காணப்பெறுகின்றன. இவற்றையும் தேடிக் காண்போம். பாஞ்சாவி சபதத்தில் கலைமகளைக் கற்பனைத் தேனிதழாள் என்று கவிஞர், உரைக்கும்போது நம் மனம் தேனின் சுவையை உணர்கின்றது. திருதராட்டிரனின் நல்லுரைகளைக் கேட்ட துரி யோதனன் கடுஞ்சினமுற்றுப் பேசுவான்;
-கெட்ட
மிக்க சருக்கரை பாண்டவர்
11. .ை வெறி கொண்ட் தாய்-2, 12. தோ.பா. வேலன் பாட்டு டி3