பாடல்களில் படிமங்கள் #85
“நல்லநல்ல நதிகளுண்டு-அவை
நாடெங்கும் ஒடிவிளை யாடிவருங்காண்;
மெல்லமெல்லப் போயவைதாம்-விழும் விரிகடற் பொம்மையக. (2)
என்ற பாடற்பகுதிகளில் இவ்வகைப் படிமங்கள் பொதிந்துள்ள மையைக் கண்டு மகிழ்க.
வேறு சில பாடல்களிலும் இவ்வகை உருக்காட்சிகள் கவினுறுத்து
வதைக் காண்போம்.
கன்னிய ராகி நிலவினி வாடிக்
களித்ததும் இந்நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடிஇல்
போந்ததும் இந்நாடே’.
இப்பாடற்பகுதியில் ஆடுதல் நீர் விளையாடுதல் என்ற சொற் றொடர்கள் இயக்கநிலையை உணர்த்துவதை அறிக்.
இமயமலை வீழ்ந்ததுபோல வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன்; இவனைச் சூழ்ந்து சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்று குறை தன்னில் திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போல:
இப்பாடலில் வீழ்த்தது வீழ்ந்துவிடுதல் சடசடவென்று சரிதல் “திமு திமென மரம் வீழ்தல் என்பவை இயக்கநிலையை உணர்த்து வதைக் கண்டு மகிழ்க.
கலவைகிலைப் படிமங்கள் : சில 7-656. p மேல் பல்வேறுவகைப் படிமங்கள் அமைந்து, கவிதைக்குப் பொலி ஆட்டி முருகுனர்ச்சியை மிகுவிக்கின்றன.
அன்னங்கள் பொற்கமலத்தடத்தின் ஊர
அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர்
கன்னங்கள் அமுதுறைக் குயில்கள் பரடுக்க
காவினத்து நறுமலரின் கம்ழ்ைத் தென்றல்
21. தே.க. நாட்டு வணக்கம்- 2. 22. டிை புதிய ருஷ்யா- ச்.