கடவுள் - சமயக் கொள்கைகள் 49
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான் பாடத் திறனடைதல் வேண்டும்.’
என்று தான் பாடும் பாடல் செவ்வனே அமைதல் வேண்டும் என்று விழைகின்றார். அப்படி அமைய அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றார்.
எந்த நாளும் கின்மேல் - தாயே! இசைகள் பாடி வாழ்வேன்.’
என்று தன் கினைவை வெளியிடுகின்றார்.இன்னுமோரிடத்தில்,
காட்டு மக்கள் நலமுற்று வாழவும் w
நானி லத்தவர் மேனிலை எய்தவும் பாட்டி லே தனி யின்பத்தை நாட்டவும்
பண்ணி லேகளி கூட்டவும் வேண்டி, கான் மூட்டும் அன்புக் கனலொடு வாணியை
முன்னு கின்ற பொழுதி லெலாங்குரல் காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
கவிதை யாவுக் தனக்கெனக்கேட்கின்றாள்”
என்று தன் பாடல்களை யெல்லாம் பராசக்தி கேட்பதாகக் கூறுகின்றார்.
சக்தி வழிபாடு இவர் மூச்சாக அமைகின்றது; அதுவே பேச்சாகக் கவிதையில் வழிந்தோடுகின்றது.
உயிரெனத் தோன்றி
உணர்வுகொண் டேவளர்ந் தோங்கிடும் சக்தியை
ஒது கின்றோம்
பயிரினைக் காக்கும் -
மழையென எங்களைப் பாலித்து நித்தம்
வளர்க்க வென்றே. * என்று வையமுழுதும் படைத்தளிக்கின்ற அன்னை பராசக்தியை வாழ்த்துகின்றார். பிறிதோரிடத்தில்,
57. :ை32-யோகசித்தி-7 58. டிை : 31 காளி ஸ்தோத்திரம் -2 59. டிை : 19 பராசக்தி - 3.
60. ை 22 வையமுழுதும் - 4 LJ