60 பாரதீயம்
‘ஹரிஹரி என் றிடினும் அஃதே; ராம ராம’
‘சிவசிவ வென் றிட்டாலும் அஃதே யாகும்; தெளிவுறவே ஒம்சக்தி என்று மேலோர்;
ஜெபம்புரிவதப்பொருளின் பெயரே யாகும்.38 இப்படி வற்புறுத்திக் கூறும் கோவிந்தசாமி பின்பும் பகர்வார்;
சாரமுள்ள பொருளினைநான் சொல்லி விட்டேன். சஞ்சலங்கள் இனிவேண்டா சரதந் தெய்வம். ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்.
எப்போதும் அருளை மனத் திசைத்துக் கொள்வாய்; வீரமிலா கெஞ்சுடையார் சிவனைக் கானார்:
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய் பேருயர்த்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேனல் வேண்டும்.’ இப்பாடலில் எல்லாச் சமயங்களும் குறிப்பிடும் அடியார் வணக் கத்தை வலியுறுத்திப் பேசுவதைக் காணலாம்.
எல்லாச் சமயங்களும் கொண்டுள்ள கருத்து ஒன்றே யாகும் எனபதை;
பூமியிலே கண்டம்ஐந்து மதங்கள் கோடி!
புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம், சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்
சனாதனமாம் இந்துமதம், இஸ்லாம், யூதம்: காமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்,
கல்லகண் பூசி மதம் முதலாம் பார்மேல் யாமறிந்த மதங்கள்பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.90 என்று வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்துகின்றார். அடுத்து காம் திடசித்தமாக இருக்கவேண்டும் என்பதை,
பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைகாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய் : சாமி:ே சாமி;ே கடவுள் நீயே;
தத்வமஸி: தத்வமஸி நீயே அஃதாம்;
88. பாரதி அறுபத்தாறு - 6.3; 89. . - 64. 99. .ை 65.