பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lisa usun B: ***** "^ ol **"*"*" கூறுமே என்றும், "நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நாநிலத்தவர் மேநிலை எய்தவும்" என்றும் பாடுகிறார். 'சக்தி' என்னும் தலைப்பில் "வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணையளக்கும் விரிவே சக்தி ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி' என்று மிகவும் அற்புதமான முறையில் பாரதி வாழ்வியலை சக்தியோடினைத்துப் பாடுகிறார். "திருவேட்கை" என்னும் பாடலில் "செல்வம் எட்டும் எய்தி - நின்னால் செம்மையேறி வாழ்வேன் இல்லையென்ற கொடுமை - உலகில் இல்லையாக வைப்பேன்" என்று பாடுகிறார். "திருமகள் துதி” என்னும் பாடலில், "அன்னம் நறு நெய் பாலும் அதிசயமாய்த் தருவாய் ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் வீடுகளும் நெடு நிலமும் 17 விரைவினியே தருவாய் நாடு மணிச் செல்வம் எல்லாம் நன்கருள்வாய்" என்றெல்லாம் பாடுகிறார். "செல்வங்கள் பொங்கி வரும் - நல்ல தெள்ளறி வெய்திடும் நலம் பல சார்ந்திடும்" என்றும், 'மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் வலியுண்டு தீமையைப் போக்கும் விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு" எனவும் "பொருளிலார் பொருள் செய்தல் முதல் கடன்' என்றும், பலவகையாக மனித வாழ்க்கைக்கு அவசியமான பண்புகளையும் கடமைகளையும் பாரதி எடுத்துக் கூறுவதையும் காண்கிறோம். பொது நெறியில் புது நெறி தெய்வப் பாடல்களில் வாழ்க்கைத் தேவைகளைக் கேட்டுத் தெய்வங்களை வேண்டுவது பாரதத்தின் பண்பாட்டு வழியிலாகும். அதே சமயத்தில் அக்கருத்துக்களில் பாரதி காலத்திற்கேற்ற புது நெறிகளையும் காட்டுகிறான். "அச்சமில்லை, அமுங்குதலில்லை நடுங்குதலில்லை, நாணுதல் இல்லை பாவமில்லை பதுங்குதலில்லை ஏதும் நேரினும் இடர்ப்பட மாட்டோம் அண்டம் சிதறினும் அஞ்சோம் கடல் பொங்கி எழுந்தாலும் கலங்க மாட்டோம் யார்க்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்