பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|IH நப் பண்பாட் டுத் தாத்தில் பாரதி சீனிவாசன் ஏழையென்றும், அடிமையென்றும், சாதியில் இழிவு கொண்ட மனிதர் ாள்பவர் இந்த நாட்டில் யாரும் இல்லை என்று. 'வாழி கல்வி செல்வ மெய்தி மன மகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒரு நிகர்ச மானமாக வாழ்வமே!" என்று விடுதலை பெற்ற பாரத சமுதாயத்தின் சமநிலையைப் பற்றித் தனது லட்சியக் கருத்தை பாரதி கூறுகிறார். அத்தகையதொரு புதிய சமுதாயத்தில் "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்த வகையிலும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரி நிகர்சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்று ஆண் பெண் சரி சமத்துவமாக வாழ்வோம் என்று ஒரு தெளிவான கொள்கையே வகுத்துக் கூறுகிறார். பெண் விடுதலை "பாரதி அறுபத்தாறு' என்னும் கவிதைத் தொகுப்பில் பாரதி பெண் விடுதலையைப் பற்றிப் பேசுகிறார். பெண் விடுதலையைப் பற்றி ஒரு புதிய கொள்கையை வகுத்துக் கூறுகிறார். "பெண்ணுக்கு விடுதலை என்றிங்கோர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளிர்' என்று தொடங்கி 'மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ" என்று ஒரு கேள்வியை ாழுப்பி 'பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை" என்று ஒரு முடிவு கூறுகிறார். மேலும் பெண்டாட்டி தன்னை அடிமைப் படுத்த வேண்டிப் பெண் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ? என்றும், "உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ" என்றும் கேட்டு "பண்டாய்ச்சி ஒளவை - அன்னை யும் பிதாவும் பாரிடை முன்ன்றி தெய் வம் என்றாளன்றோ" என்றும் சுட்டிக் காட்டுகிறார். "தாய்க்கு மேல் இங்கேயோர் தெய்வ முண்டோ தாய் பெண்ணல்லளோ, தமக்கை தங்கை, வாய்க்கும் பெண் மகவெல்லாம் பெண்னேயன்றோ? மனைவியொருத்தியை அடிமைப் படுத்த வேண்டித் தாய்க் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ? தாயைப் போல் பிள்ளை யென்று முன்னோர் வாக்குளதன்றோ? பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப் பொன்றாமோ?" என்றும், "ஆதி சக்தி தனை உடம்பில், அரனும் கோத்தான், அயன் வாணி தன்னை நாவில் அமர்த்திக் கொண்டான் சோதி மணி முகத்தினளைச் செல்வம் மெல்லாம் சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில் மாதவனும் ஏந்தினான். வானோர்க்கேனும் மாதரின்பம் போல் பிரிதோர் இன்ப முண்டோ? காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்" என்றும் கூறிப் பெண்மையைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி நமது நாட்டு மரபு வழியில் பெண் விடுதலையை பாரதி வலியுறுத்துகிறார். "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர்- நல்ல