பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யப் பண்பாட் டுத் தளத்தில் பாரதி - ரீனிவாசன் நல்ல சொல் உரைத்து நகைத்தனன், மறைந்தான், மறைந்தோர் கண்ணன் மறுகணத் தென்றன் நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவானாயினன்" "மகனே! ஒன்றையாக்குதல் மாற்றுதல், அழித்திடல் எல்லாம் நின் செயலன்று காண், தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே, வென்றாய், உலகினில் வேண்டிய தொழி லெலாம் ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ என்றான், வாழ்க மற்றவனே!" ான்று அந்த அற்புதமான கவிதையைப் பாடி முடிக்கிறார். பாரதியின் இந்தப் பாடல் நெஞ்சை அள்ளுவதாகும். உலக அனுபவமும் கடமையும் பக்தியும் இணைந்து அன்புடன் கண்ணனை, இந்நாட்டின் இளைஞன் வடிவத்தில் கண்டு ஆணையிட்டு வாழ்த்திக் கடைசியில் பண்ணனிடமே அறிவுரையும் வாழ்த்தும் பெற்று அவனையும் வாழ்த்திக் விதையை முடிக்கிறார். ஆண்டவனுக்கே பல்லாண்டு பாடிய மரபு நமது மரபாகும். கண்ணனுக்கே வாழ்த்துக் கூறி பாரதி தனது பாட்டை முடிக்கிறார். கண்ணன்-எனது சத்குரு கண்ணனைச் சீடனாகக் கண்ட பாரதி அவனை தனது சத் குருவாகவும் பண்டு, அற்புதமான முறையில் பக்திப் பரவசத்துடன் புன்னாகவராளி ாகத்தில் ஓர் அற்புதமான கவிதையை பாடுகிறார் "சாத்திரங்கள் பல தேடினேன் - அங்கு சங்கை யில்லாதன சங்கையாம் - பழங் கோத்திரங்கள் சொல்லும் மூடர் தம் - பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ?" ான்று பாரதி தனது கவிதையைத் தொடங்குகிறார். பாரதி, நாடு முழுதும் சுற்றிப் பல நாட்கள் அலைந்து திரிந்து கடைசியில் யமுனைக் கரையில் தடியூன்றிச் சென்று கொண்டிருந்த ஒரு கிழவரைக் பண்டார். 'ஒளிகூடும் முகமும் தெளிவு குடி கொண்ட விழிகளும் சடைகளும் வெள்ளைத் தாடியும் கொண்ட அந்தக் கிழவனாரை வணங்கித் தனது உள்ளத்து ஆசையைக் கூறுகையில், 'தம்பி ! நின்னுள்ளத்திற்குத் தகுந்தவன்-சுடர் நித்திய மோனத் திருப்பவன் - உயர் மன்னர் குலத்தில் பிறந்தவன்- வட மாமதுரைப் பதி ஆள்கிறான்- கண்ணன் தன்னைச் சரண் என்று போவையால் அவன் சத்தியம் கூறுவர்" என்றனர் அவர் கூறியதைக் கேட்டு அம்மாமதுரைக்குச் சென்றேன். அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றி, எனது பெயரையும், ஊரையும் கருத்தையும் கூறி எனக்கு நன்மை தரும்படி வேண்டினேன். ஆனால் அந்தக் கண்ணன் அங்கு எப்படியிருந்தான்? என்ன செய்து கொண்டிருந்தான்? "காமனைப் போன்ற வடிவமும்-இளங் காளையர் நட்பும் வழக்கமும் - கெட்ட பூமியைக் காக்கும் தொழிலிலே - எந்தப் போதும் செலுத்திடும் சிந்தையும் ஆடலும் பாடலும்" கண்டேன். ஆற்றங்கரையில் கண்ட கிழவன் மீது எனக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. 'சிறு நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன் - தவப் பாடு பட்டோர்க்கும் விளங்கிடா- உண்மை பார்த்திவன் எங்ங்ணம் கூறுவான்? என்று கருதியிருந்தேன்.ஆனால் அக்கண்ணன் என்னைத்தனியிடத்திற்கு அழைத்துச் சென்று. "மைந்தனே! - பர ஞான முரைத்திடல் கேட்பை நீ - நெஞ்சில், ஒன்றும் கவலையில்லாமலே - சிந்தை ஊன்ற நிறுத்திக்களைப்புற்றே - தன்னை வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு விண்ணையளக்கும் அறிவு' கிட்டும் என்று தத்துவ போதனையுடன் தொடங்குகிறான். 45