பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 96 என்று கூறி இப்போது ஒரு வசைச் சொல்வந்துள்ளது. அதை நீக்கி தமிழை மேன்மையுறச் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகிறான். "புத்தம் புதிய கலைகள்- பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்தவளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை என்றும், அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை, மெல்லத்தமிழ் இனிச்சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஒங்கும் என்னும் வசை மொழியை அந்தப் பேதை உரைத்தான் என்று கண்கலங்கிப் பேசி இந்த வசை எனக்கு எய்திடலாமோ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று தமிழ்த் தாய் தனது மக்களுக்கு ஆணையிடுவதாக பாரதி கூறுவது நம்மையெல்லாம் உணர்வூட்டி தமிழை வளர்க்க, அதற்காக செயலில் இரங்க ஊக்கப்படுத்துவதாகும். இந்த முழு நம்பிக்கையுடன் "தந்தை அருள்வலியாலும் - இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் இந்தப் பெரும் பழி திரும் - புகழ் ஏறிப்புவிமிசையென்று மிருப்பேன்" என்று தமிழ்த்தாய் தன்னம்பிக்கை கொண்டிருப்பதை பாரதி எடுத்துக் காட்டியுள்ளார். பாரதி இந்தப் பாடலை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடியுள்ளார். நாடு அடிமைப்பட்டு அன்னிய ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில் பாடிய பாடலாகும் என்றாலும் இன்றும் இக்கருத்துக்குப் பொருத்தம் இருக்கிறது. நாடு விடுதலை பெற்றுவிட்டது. விடுதலை பெற்று அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்திய நாடும் தமிழகமும் முன்னேற்றம் கண் டி ருக்கிறது. தொடர்ந்து மு ன் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து கலைகளும், கலைச் செல்வங்களும், பஞ்ச பூத நுட்பங்களும் அறிவியல் செல்வங்களும் தமிழில் கிடைக்க, தமிழில் படிக்க, அத்துறைகளில்தமிழை வளர்க்க, பாரதியின் கட்டளைகளை தொடர்ந்து நிறைவேற்ற முயற்சிகள் தொடர வேண்டும்.