பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 144 உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" என்று பாடினார். இதன் மூலம் தனது மரபு வழியை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். பாரதி தமிழ் மொழி மட்டும் அறிந்தவன் அல்ல. ஆங்கிலம், பிரஞ்சு, இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகளிலும்அவருக்கு பயிற்சியும் பரிச்சயமும் உண்டு. வங்காளி மொழிபற்றியும் அவருக்கு பரிச்சயம் உண்டு. அதனால் தான் அவர் யாமறிந்த மொழிகளிலே என்று தொடங்கினார் போலும் பாரதி வியாசரையும் வால் மீகியையும், வேதங்களுக்கு விளக்கம் கூறிய வசிஷ்டரையும், வாம தேவரையும், இன்னும் மனுவையும்கெளடில்யரையும், அடுத்து வந்த காளி தாசரையும்தன் காலத்திய ரவிந்திரநாத்தாகூரையும் மற்றும் ஆங்கில பிரஞ்சுப் புலவர்களையும் படித்தவர்.அறிந்தவர். இருப்பினும் யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல இளங்கோவைப் போல, பூமியில் யாங்கணும் கண்டதில்லை என்று பெருமையுடன் பாடினார். "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்று தொடங்கி, வேதம் நிறைந்த தமிழ் நாடு. வீரம்செறிந்த தமிழ்நாடு, இளங்கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு, முத்தமிழ் மாமுனிகாக்கும் தமிழ்நாடு கல்வி சிறந்த தமிழ்நாடு கம்பன் பிறந்த தமிழ்நாடு பலவித சாத்திரங்களின் மணம் பாரெங்கும் விசும் தமிழ்நாடு, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் படைத்த தமிழ்நாடு, கலை ஞானமும், படைத்தொழிலும், வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு என்றெல்லாம் புகழ்ந்து பாடுகிறார். அதைக் கேட்கும் போது நமக்கு உடம்பு சிலிர்க்கிறது. உள்ளம்பூரிக்கிறது. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருனை ஆகிய ஐந்து ஆறுகளும் பாரத நாட்டின் கங்கை, சிந்து, பிரம்ம புத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா நதிகளைப் போன்று புண்ணிய நதிகளாகப் பாடல் பெற்றவை. இந்த ஐந்து ஆறுகளுடன் மேலும் பல சிற்றாறுகளும்ஓடி தமிழகத்தின்மேனி செழித்து நாகரிகம் பரவியுள்ள திருநாடு. தமிழ்த்தாயை ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்றும் அகத்தியன் இலக்கணம் செய்தான் என்றும் மூன்று குலத்தமிழ் மன்னர் ஆண்டார்கள் என்றும், ஆரியத்திற்கு நிகராகத் தமிழ்மொழி வாழ்ந்தது என்றும் புலவர்கள்