பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 35 "உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் "ஒதுபற்பல நூல்கள் கற்கவும் இலகு சீருடைநாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலகவாணுதலார் நாங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம் விலகி விட்டிலோர் பொந்தில் வளர்வதை விரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்" என்றும் "சாத்திரங்கள் பல பல கற்பராம் சவுரியங்கள் பல பல செய்வராம் மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம் மூடக் கட்டுகள் யாவும் தகர்ப்பராம். "காத்து மானிடர் செய்கையனைத்தையும் கடவுளர்க் கினிதாகச் சமைப்பராம் ஏத்தியாண்மக்கள் யாவும் அழிப்பராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ" என்றெல்லாம் புதுமைப் பெண்ணின் புதிய கருத்துக்கள் ஒலிப்பதாக பாரதி மகிழ்ச்சி கொண்டு பாடுகிறார். "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் அட்டமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ 'வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டிவந்தோ மென்று கும்மியடி சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச்

  • II

சாதிபடைக்கவும் செய்திடுவோம் "காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி" என்று புதுமைப்பெண்ணிற்கு இலக்கணம் வகுத்து புதிய குடும்ப அமைப்பை வகுத்துக் கொள்ளும் பாரதக் கொள்கையை பாரதி முன்வைக்கிறார்.