பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 40 இவ்வுலகம் சித்தமயம் என்பதும் அந்த உறுதி நமது சித்ததில் நிலைபெற்று ஓங்கிவிட்டால் உலகனைத்தையும் வெல்லலாம் என்றும் சித்தர்களின் சொல், நீர் மேல் நடக்கலாம், காற்றிலே உலாவலாம். நெருப்பிலே செல்லலாம், மிருகங்களை அடக்கலாம், இவ்வாறாகக் கூறிய சொற்கள் பாரதத்தாயின் சொற்களாகும். "சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால் - துன்பம் அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல் ஆரியராணியின் சொல் II என்பது பாரதியின் கவிதையாகும். அரச குலத்தின் முழுமையான விரத்தையும் வித்தைகளையும், அந்தணர் குலத்தின் முழுமையான அறிவாற்றலையும் யாக பலத்தையும் ஒரு சேரப் பெற்று பிரம்ம ரிஷி என்னும் பட்டத்தைப் பெற்று தனிச்சிறப்போடு விளங்கிய விசுவாமித்திரருக்கும் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று, அழகிற் சிறந்த பேரழகியான மேனகைக்கும் பிறந்த சகுந்தலை பெற்ற பிள்ளை பரதன்.அந்த பரதன் பெயரிலேயே இந்த நாடு பாரத நாடு என்றும் பரத கண்டம் என்றும் சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. அப்பரதன் வீரத்தின் வடிவம், துணிவின் சின்னம், சிறு பிள்ளையாக இருக்கும் போதே சிங்கத்தைத் தட்டி விளையாடிய தீரன். மனிதன் தனது தலை சிறந்த அறிவாலும் ஆற்றலாலும் மிருகங்கள் பலவற்றையும் அடக்கி அடிபணியச் செய்தான். அது வீரத்தின் அடையாளம். சிங்கத்தினையே தட்டி விளையாடிய பரதன் பாரத ராணியின் பிள்ளை, அதை "சகுந்தலை பெற்றதோர்பிள்ளை சிங்கத்தினைத்தட்டி விளையாடி - நன்று உகந்ததோர் பிள்ளை முன்பாரத ராணி எளியுறப் பெற்ற பிள்ளை" என்று பாரதி பாடுகிறார். பஞ்சவர்களில் பார்த்தன், வீரர்களில் சிறந்தவன். அந்த அர்ஜூனனில் வில்லிற்குக் காண்டிவம் என்று பெயர். முந்திய யுகத்தில் இராமபிரானின் வில்லிற்கு கோதண்டம் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. அடுத்தாற்போல் சிறப்புப் பெயர் பெற்றது அர்ஜூனனுடைய வில்லாகும். "கன்னானுந்திண்டோள்களவீரன் பார்த்தன் ஒரு வில்நாண்ஒலி கேட்டமேன்மைத்திருநாடு" என்று பார்த்தனின் தோள்வலி, வில்நாண் ஒலி ஆகியவற்றை பாரதி குறிப்பிடுகிறார்.