பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 58 கண்ணன் என் சேவகன் என்னும் கவிதை மிகவும் அற்புதமான ஒரு கவிதையாகும். அக்கவிதை மூலம் பாரதி கூறியுள்ள கருத்துக்கள் தினசரி ந மக்கு ஏற்படும் அனுபவங்களாகும். உழைப் பின் மேன்மை, தெய்வீகத்தன்மை ஆகியவற்றை அற்புதமான முறையில் பாரதி கூறியிருப்பது அவருடைய தனித்தன்மையான சிறப்பிற்கு மற்றொரு எடுத் து க் காட் டா கு ம். க வி ைத முழு வ தி லு ம் பக் தி ரசம் இழையோடியிருப்பதையும் நாம் காண முடிகிறது. பச்யைான சில உண்மைகளை நாடக பாணியில் நகைச்சுவையுடன் இலக்கியரசனையுடன், உள்ள தத்துவ நெறி நிறைந்த இந்த வரிகள் பாரதியின் அற்புதமான படைப்புகளில் ஒன்றாகும். "கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம்தாம் மறப்பார் வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார், "ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை யென்றால், பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்ததென்பார் விட்டிலே பெண்டாட்டிமேல் பூதம் வந்ததென்பார் பாட்டியார் செத்துவிட்ட பனிரெண்டாம் நாள் என்பார். "ஓயாமல் பொய்யுரைப்பார், ஒன்றுரைக்க வேறுசெய்வார் தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார் உள்விட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்துரைப்பார், "எள்விட்டில் இல்லை யென்றால் எங்கும் முரசரைவார் சேவகரால்பட்ட சிரமம் மிகவுண்டு கண்டிர் சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை என்று பாரதி மிகவும் நகைச் சுவையுடன் நுண்புலத்துடன் கவிதையைத் தொடங்கி "எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதிநான் என்றான்" என்று "பக்திரசம் ததும்பக்கவிதையைத் தொடர்கிறார். "மாடுகன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன் விடுபெருக்கிவிளக்கேற்றி வைத்திடுவேன் சொன்னபடி கேட்பேன், துணி மணிகள் காத்திடுவேன் சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன் காட்டுவழியானாலும் கள்ளர் பயமானாலும் இரவிற்பகலிலே எந்நேரமானாலும் சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர்தம்முடனே, சுற்றுவேன், தங்களுக்கோர்துன்பமுறாமல் காப்பேன் கற்றவித்தை ஏதுமில்லை காட்டு மனிதன் ஐயே,