பக்கம்:பாரம்பரியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பாரம்பரியம் ஆராயப் பாரம்பரியத்தை ஒரே மாதிரியாக இருக்கச் செய்ய வேண்டும். இாட்டைக் குழந்தைகளே ஆராய்வ தன் மூலம் இவை இரண்டையும் பற்றி அறிந்து கொள்ள முடியும். இாட்டைக் குழந்தைகளிலே இருவகையுண்டு. ஒரு வகை இரட்டைக் குழந்தைகள் வெவ்வேறு அண்டங் களிலிருந்து வளர்ந்தவை. சாதாரணமாக மாதத்திற்கு ஒரு அண்டக்கான் கருப்பையை அடைகிறதென்று முன்பு கண்டோம். ஆனல் சில சமயங்களில் இரண்டு அண்டங் களும் வருவதால் இம்மாதிரி இாட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இக்குழந்தைகள் வயதில் ஒத்திருந்தாலும் தோற்றத்திலும் தன்மையிலும் வேறுபட்டிருக்கின்றன. மற்முெரு வகை இாட்டைக் குழந்தைகள் ஒரே அண்டத்தி லிருந்து தோன்றுகின்றன. சில சமயங்களில் ஒரு அண் டம் இரண்டாகப் பிரிந்து தனித்தனிக் கருவாக வளர்வ துண்டு. அப்படி வளர்ந்து பிறக்கும் இாட்டைக் குழந்தை கள் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்கும். இக்குழந்தை களைக் கொண்டே பாரம்பரியத்தைப்பற்றி நன்கு ஆராய இயலும். ஒரே அண்டத்திலிருந்து வளர்ந்த இரட்டைக் குழங் கைகளை ஒருங்கே வளர்த்தால் அவற்றின் பாரம்பரியம் ஒன்ருக இருப்பதோடு சூழ்நிலையும் அநேகமாக ஒன்ரு கவே இருக்கின்றது. அவை ஒன்றையொன்று உருவத்தில் ஒத்திருப்பதோடு மனத்திறமைகளிலும் ஒத்திருக்கின்றன. ஒன்று மந்த புத்தி உடையதாயிருந்தால் மற்ருென்றும் அவ்வாறே இருக்கின்றது. ஆனல் அக்குழந்தைகளே வெவ்வேறு சூழ்நிலையில் வளர்த்தால் அச் சூழ்நிலைக்குத் தக்கபடி அதன் திறமைகளின் மலர்ச்சியில் வேறுபாடு காணப்படுகின்றது. ஒரு குழந்தை ஒரு சிறந்த சங்கீத விக்வான் வீட்டிலும் மற்றென்று ஒரு சேரியிலும் வளர்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/81&oldid=820477" இலிருந்து மீள்விக்கப்பட்டது