இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6. போரைத் தடுக்க வழி "மூன்ரும் உலகப்போர் மூண்டால், அதில் என் னென்ன போர்க் கருவிகள் பயன்படுத்தப்படும்?" என்று உலகப் பேரறிஞர் ஐன்ஸ்தீனைப் பார்த்து ஒரு நண்பர் கேட்டார்.
- மூன்ரும் உலகப் போரில் பயன்படுத்தப்படும் கருவிகளைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனல் நான் காம் உலகப்போரில் கற்கருவிகளே பயன்படுத்தப் படும்” என்று நகைச் சுவையும் கருத்தாழமும் கொண்ட விடையை அவர் தம் நண்பருக்குக் கூறினர்.
பேரறிஞர் ஐன்ஸ்தீனின் கூற்று மறுக்க முடி யாத உண்மையாகும். மூன்ரும் உலகப்போர் ஏற் பட்டால், உலகம் அழிவது திண்ணம். ம. க் க ள் நாகரிகம் மறுபடியும் கற்காலத்திற்குத் திரும்ப வேண்டியதுதான். அமைதி இயக்கங்கள் : முதல் உலகப் போரினல் ஏற்பட்ட அழிவை யும், பொருள் இழப்பையும், உயிர்க் கொலையையும் கண்ட உலக நாடுகள், போர் அரக்கன் பிடியி லிருந்து எவ்வாறேனும் மீள வழிகாணவேண்டும் என முயற்சித்தன; அம்முயற்சியின் பயனுக உலக நாடுகள் கழகம்’ என்ற ஓர் அமைப்பு ஏற்பட்டது என்றும், அதை முன்னின்று நிறுவியவர், அமெரிக்க நாட்டுத் தலைவராக விளங்கிய உட்ரோ வில்சன்