பக்கம்:பாரும் போரும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O7 கையில் அது கிடைத்துவிட்டால், இவ்வுல கத்தை அவனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது? என்பனபோன்ற கேள்விகள் அறிஞர்களின் உள்ளத் தில் தோன்றுகின்றன. ஆனால், வல்லரசுகளோ போட்டி போட்டுக் கொண்டு, நீர்வளிக் குண்டுகளை யும், கண்டத்திலிருந்து கண்டம் பாயும் பறக்கும் குண்டுகளையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள் ளன; அதுவுமன்றி, படைகளையும் படைக் கருவி களையும் பெருக்குவதால்தான் உலகத்தில் போரை ஒழிக்க முடியும் என்றும் கூறி வருகின்றனர். ஆனல் அணுகுண்டு, நீர்வளிக் குண்டுகளின் அச்சத்தி ஞலேயே இன்று போர்ப் பீதி அடங்கிவிட்டதாகச் சொல்ல முடியாது. உலக வல்லரசுகள் ஒன்றன் குரல்வளையை ஒன்று நெறிப்பதற்குரிய காலத்தை யும் வாய்ப்பையும் ஒவ்வொரு வினுடியும் எதிர் நோக்கிக்கொண்டிருக்கின்றன. மூன்ரும் உலகப்போர் ஏற்பட்டால் ! ஒரு குறிக்கோளுக்காக யாரேனும் ஒருவன் உயி ரைக் கொடுக்கலாம். ஓர் உயர்ந்த குறிக்கோளுக்காக ஓராயிரவர்கூட இறக்கலாம். ஆனல் சில அரசி யல் வாதிகளின் பேராசைக்காகவும், தந்நலத்திற் காகவும், பல கோடி மக்கள் இறப்பதென்பது மன் னிக்கமுடியாத மாபெருங் குற்றமாகும். ஒரு நாட்டை எந்த ஓர் அரசியல்வாதியாவது போருக்குத் தூண்டி விடுவானல்ை, அவன் இரும்பு மனம் கொண்ட கொலைஞனைவிட இழிவானவன். எந்த ஒரு நாடா வது அரசியல் வாதிகளின் தூண்டுதல்களை மேற் பா. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/114&oldid=820513" இலிருந்து மீள்விக்கப்பட்டது