பக்கம்:பாரும் போரும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 08 கொண்டு போரில் இறங்குமேயானல் அச்செயல் ஒரு மாபெரும் கூட்டுத் தற்கொலை (Mass suicide) யாகும். மேலேநாட்டு அறிஞர் ஒருவர், 'மூன்ரும் உலகப் போர் ஏற்பட்டால் யார் வெல்வர்? யார் வீழ்வர்? என்று உறுதியாகச் சொல்ல முடியாது. உலகம் சுடுகாடாக்கப்படும். வெற்றியடைந்த நாடு ஈடும் எடுப்புமற்ற மாபெரும் சக்தியாக விளங்கும்; உலகப் பேரரசியாகத் தலைநிமிர்ந்து நிற்கும். ஆனல் கட்டியாள உலகத்தில் மக்களினம்தான் இருக்காது. அவ்வாறு ஏற்படும் உலகப் போரில், பெருநிலப் பரப்பைத் தன்னகத்தில் கொண்ட உருசிய நாடு மறு படியும் புத்துயிர் பெற்ருலும் பெறலாம். உருசிய நாட் டைவிட அமெரிக்க நாட்டிற்கு மாபெரும் சேதம் விளையும். அப்போரில் ஆங்கிலேயர் கலந்து கொண் டால் பிரிட்டன் என்ற நாடு உலகப் படத்திலேயே இல்லாமல் போய்விடும்” என்று கூறியுள்ளார். இன்றைய உலகம் இரண்டு மாபெரும் கொள் கைகளின் மோதற்களமாக விளங்குகிறது. அமெ ரிக்காவும் அதன் துணை நாடுகளும், உருசியாவும் அதன் துணை நாடுகளும் ஈரணியாகப் பிரிந்து, தங்கள் தங்கள் கொள்கைகளையும் செல்வாக்கை யும் வளர்ப்பதில் பேருக்கம் காட்டுகின்றன. உலக ஒருமைப்பாட்டைப் பற்றி எங்கும் பேசப்படும் இக்காலத்தில் இவ்விரண்டு அணிகளும் பிரிந்து வெகு தொலைவில் சென்றுகொண்டிருக்கின்றன. இவர்கள் பகை நெருப்பு எப்பொழுது பற்றி எரியுமென்று யாரும் சொல்ல முடியாது. யாராவது ஒருவர் உலக நன்மையின் பொருட்டுத் தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/115&oldid=820514" இலிருந்து மீள்விக்கப்பட்டது