பக்கம்:பாற்கடல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

171


காதைப் பொத்திக் கொள்கிறேன்.

“மனுஷாள்னா பலவிதந்தான்!”

பிரம்புச் சாய்வு நாற்காலியில் வீற்றிருந்தபடி உள்ளங்கையில் தானே பறந்துவந்து உட்கார்ந்துகொண்ட அம்மா சிட்டுக்குருவியை மறுபடியும் அதன் சிறகு விரிப்புக்கு வீசி எறிவதுபோல், அம்மா கையை ஒருமாதிரியாக உதறுவாள். அதுவே ஒரு அழகு - No; graceக்கு நேர்த்தமிழ் யாரேனும் சொல்லுங்களேன்! ஸாஹசம்? சொகுஸு ? ஹு ம், இல்லை, இதையெல்லாம் தாண்டி, எதோ ஒரு நேர்த்தி. எப்பவுமே அம்மாவின் சைகைகளில் இரைச்சல் இருக்காது. அவளுக்குச் சைகைகளே குறைச்சல்.

“ஆனால் சிதம்பர மாமாவாத்துக்குப் போனால் எங்கள் பாடு ஒரே குஷிதான்." அந்த நினைப்பில், இப்பவும் அவள் விழிகள் குழந்தைபோல் விரியும். தனி ஒளி வீசும். அவரும் அழைத்துக்கொண்டு போய் வைத்துக்கொள்வார். “ஸ்ரீமதி குழந்தைகைைள யாருடி கூப்பிடறா, காரியவாதிகளைத் தவிர ? - அங்கே வேலையே கிடையாது; வேளா வேளைக்குச் சாப்பாடு, மேல் தீனி. அங்கே போய்விட்டுத் திரும்பினாலே நாங்கள் மொழு மொழுன்னுதான் வருவோம். கோயமுத்தூர் வெயில் மிதத்துக்குக் கேக்கணுமா? செவந்து போய், சேவல் கொண்டை போல. சிதம்பர மாமா கர்வி. எல்லாரையும் தூக்கியெறிஞ்சு பேசுபவராக இருக்கலாம். ஆனால் அம்மாப் பெண் மேல் அவருக்குப் பிரியம்தான். “குட்டி, குட்டி!” என்று அழைப்பார்.

“நாங்கள் நாய்க்குட்டி போல, சிறு சிறு நன்றிகளையும் எங்களால் மறக்க முடியாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/177&oldid=1534280" இலிருந்து மீள்விக்கப்பட்டது