பக்கம்:பாற்கடல்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

லா. ச. ராமாமிருதம்


சொல்வார்: “பெண்களிடம் எப்பவுமே கொஞ்சம் பேய்க்குணம் உண்டு.”

அம்மாவிடம் பாசம், பக்தி, அன்பு, பிரியம் — இந்த அம்மாவுக்கும் இந்தப் பிள்ளைக்கும் உள்ள பந்தம் எங்கள் குடும்பத்துள் பிரசித்தமாகிவிட்டது. அதை மறைக்கவோ, மறுக்கவோ அவசியம் இல்லை.

அம்மாவிடம் அன்பு பிரியம், பாசம், பக்தி — இவை எல்லாவற்றையும் முன்னிட்டுக் கொண்டு எனக்கு அவளிடம் எப்பவுமே ஒரு லேசான அச்சம் உண்டு.

முதலியார் சொன்னது காரணமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/314&oldid=1534439" இலிருந்து மீள்விக்கப்பட்டது