பக்கம்:பாற்கடல்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

325


வேட்டை நடந்துகொண்டு தானிருக்கும். ஒருநாள் இப்படியே குண்டுக்கோ அம்புக்கோ, பொட்டென்று இரையானாலும் போச்சு.

அல்லது –

இப்படியே ஆறிக்கொண்டும் அழுகிக்கொண்டும் முழு வயது வாழ்ந்து கடைசியாக ஒரு நாள் அதன் வேளை வந்ததும் மறைவிடம் தேடி உயிரை நீத்தாலும்

போச்சு.

ஆனால்….

எப்படியும் அவைகளின் கம்பீரம் கடைசிவரை அவைகளைக் கைவிடுவதில்லை. மாந்தரைப் போல அவைகளுக்குத் தன்னிரக்கம் கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/331&oldid=1534457" இலிருந்து மீள்விக்கப்பட்டது