பக்கம்:பாற்கடல்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

329


கூடமாக விளங்குகிறதே, அவனை யார் என்ன செய்வது? 'ஆண்டவனே! உனக்கு அடுக்குமா?' என்று அப்பவும் அவனையேதான் சரணடைகிறோம். நமக்கும் வேறு கதியில்லையா? அவனும்தான் இப்படியெல்லாம் நம்மைச் சோதனை செய்து என்ன தேடுகிறான்?

அண்ணா மூன்று பெண்களையும், ஒரு பிள்ளையையும், மனைவியையும், தாயாரையும் நடுவழியில் விட்டு விட்டு மீளாத தன் தனிப் பயணத்தில் போய்விட்டார்.

எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணும் அண்ணா.

யார்க்கும் உபகார அண்ணா.

ஆபீஸ் ட்ரஸ்ஸில் - டர்பன், கோட், பஞ்சகச்சம், இரட்டை நாடி சரீரம் - காம்பீர்ய அண்ணா.

இது கடந்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. நாராயணனும் ரிஸர்வ் பாங்கிலிருந்து ஓய்வு பெற்றாயிற்று.

ஆனால் -

அன்று மன்னி தோளில் அம்மா தலையை இங்கு பார்க்கையில், உடனே அடுத்து, மகனைப் பறிகொடுத்த தாய், கணவனைப் பறிகொடுத்த மருமகளைத் தேற்றும் காக்ஷி நினைவில் எழுகிறது.

Ballet, Silhouette, பொம்மலாட்டம், Tableaux நாடக நடனங்களில் இதுபோலும் விதங்கள் உள. தவிர, சினிமா, டிராமா. ஆனால் எத்தனை வருடங்களாயினும் அழியாது, நெஞ்சில் உறைந்துபோன இச்சித்திரங்களுக்கு ஈடாகுமோ?

இங்கு ஒன்று சொல்வது முறையாகும். இந்த வரலாற்றில் இதுவரை கண்டிருக்கும் சம்பவங்கள் அப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/335&oldid=1534520" இலிருந்து மீள்விக்கப்பட்டது